India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த புஜாரா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், புஜாராவிற்கு தனது நன்றியை விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அதில் நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி என்றும் உங்களது கிரிக்கெட் பயணம் அருமையாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். உங்களது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 440 ▶குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
▶ பொருள்: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பாக்., முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனவும், வரலாற்று பூர்வ நிகழ்வாக இது அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லை பதற்றம் காரணமாக கடந்த 2014 முதல் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
▶ஆகஸ்ட் 27, ஆவணி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
சோஷியல் மீடியாவில்(SM) வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு SC அறிவுறுத்தியுள்ளது. SM-ல் பதிவுகள் வணிகமயமாகியதால், மாற்றுதிறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாக கோர்ட் கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக 5 யூடியூபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையம் அருகே, அமைச்சர் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பஞ்சப்பூரில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்த நேரு, அப்படி இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல், CM குடும்பத்துடன் நேருவுக்கு மோதல் இருப்பதாக செய்தி பரவியதையும் அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
பயனர்களை Engaging-ஆக வைத்துக் கொள்ள Spotify நிறுவனம் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமூக வலைதளங்களில் இருப்பதை போன்ற Direct Message (DM) அம்சத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பாடல்கள், பாட்காஸ்ட், ஆடியோ புத்தகங்களை விரும்பிய நபர்களுக்கு அனுப்புவதோடு Chat-ம் பண்ணலாம். இதில் பயனர்கள் தங்களுக்கு வரும் Request-களை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும்.
Sorry, no posts matched your criteria.