India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹74,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ₹1 குறைந்து ₹130-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,30,000-க்கும் விற்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வருவதாக USA அறிவித்துள்ளது. இது வந்தால் ஜவுளி ஏற்றுமதி, ரத்தினங்கள் ஏற்றுமதி, மருந்து பொருள்களை தயாரிப்பு, செல்போன் உற்பத்தி உள்ளிட்ட துறையை இது பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. வரி உயர்வு குறித்து USA உடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்து, கடைசி நேரத்தில் அது ரத்தானது குறிப்பிடத்தக்கது.
➤அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
➤சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்துவும் அருகம்புல் சாறு உதவும்.
➤நரம்புத் தளர்ச்சி பிரச்னைகளுக்கும் அருகம்புல் சாறு குடிப்பது சிறப்பான பலன்களை அளிக்கும்
➤அருகம்புல் சாறு உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்வதால், சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
தமிழகத்தை போல பஞ்சாபிலும் காலை உணவு திட்டத்தை துவங்க பரிசீலிப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். தமிழகத்தை போல பஞ்சாப் அரசும் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறினார். மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுவது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர், உங்களுக்காகவே இத்திட்டத்தை CM ஸ்டாலின் செய்கிறார் என மாணவர்களை நோக்கி தெரிவித்தார்.
உங்களுடைய EB Bill வழக்கமாக கட்டும் தொகையை விட அதிகமாக வருவதாக தோன்றுகிறதா? இவை காரணமாக இருக்கலாம் ▶8 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட மின்சாதன பொருள்களை தூக்கிவீசுங்கள் ▶பராமரிக்கப்படாத AC-ஆல் மின்கட்டணம் உயரலாம் ▶TV போன்ற சாதனங்கள் OFF-ல் இருக்கும்போதும் மின்சாரத்தை உறிஞ்சும். அதனால் அதனை Unplug செய்யுங்கள் ▶மின்சாரத்தை குறைவாக ஈர்க்கும் LED BULB-களை பயன்படுத்தலாம். SHARE IT.
தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விஜய் நாகரிகமாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தேர்தலில் 10% வாக்குகள் பெற்றார். தற்போது அக்கட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும்; நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கி நடத்திய மாநாட்டில் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். கடைசியில் அக்கட்சி காங்கிரஸுடன் இணைந்தது; இதேநிலை விஜய்க்கும் வரலாம் என செல்வப்பெருந்தகை சூசகமாக தெரிவித்தார்.
சொகுசு பங்களாவை ஜப்தி பண்ண, நோட்டீஸ் வீடு தேடி வந்தாலும், தயாரிப்பு நிறுவனம் துவக்க விழா வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ரவி மோகன். இந்த நிலையில், ஆர்த்தி ரவி ‘நீங்கள் மற்றவர்களை ஏமாற்றலாம், உங்களையே ஏமாற்றிக் கொள்ளலாம், ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது’ என இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். ரவியை அட்டாக் பண்ணி தான் இப்படி ஒரு ஸ்டேட்டஸை வைத்துள்ளார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், காலை 10 மணிக்கே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல மக்கள் தயங்குகின்றனர். குறிப்பாக, இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் IMD எச்சரித்துள்ளது. எனவே, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
◆குதிரைவாலி ரத்த சோகையை தடுப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
➥குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். இதனை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
➥தக்காளி, சீரகம், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து, புளிக்க வைத்த மாவுடன் சேர்க்கவும்.
➥இந்த மாவை தோசையாக்கி சாப்பிட்டால், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.