India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடுமென கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். பிஹாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் யார் பலனடைகின்றனர் என்பது தெளிவாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோசடிகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது எனக் கூறினார்.
பான் கார்டு சேவைகளை பெற விரும்புவோர் இத்தகவலை கவனித்துக் கொள்ளுங்கள். இன்று நள்ளிரவு(ஆகஸ்ட் 17) 12 மணி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வருமான வரித்துறையின் இணையதளம் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, சேவைகள் நிறுத்தப்படுகிறது. எனவே, சேவைகளை பெற விரும்புவோர் 3 தினங்கள் கழித்து விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனிருத்துக்கு எப்போது திருமணம் என்ற டாபிக் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ‘கூலி’ படம் பார்க்க வந்த அவரது தந்தையும், நடிகருமான ரவி ராகவேந்திராவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு அதைப் பற்றி தெரியவில்லை என்றார். உங்களுக்கு (செய்தியாளர்கள்) தெரிந்தால் சொல்லுங்கள், என்னையும் கூப்பிடுங்கள் என கிண்டலாக கூறியுள்ளார். ஏற்கெனவே காவ்யா மாறனுடன் அனிருத் கிசுகிசுக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை சற்று கடினமாக இருப்பதாக ஏற்கெனவே பாஜக MP கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இந்நிலையில், அரசியல் சுற்றுப்பயணங்களின் போது கழிப்பறை பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமாவில், பெண்கள் மாதவிடாய் நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாப்கின்களை மாற்ற நேரமும், இடமும் இருக்கும் என்ற அவர், அரசியலில் அதன் நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகனும் MLA-வுமான செந்தில்குமார் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ED ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக, MLA விடுதியில் உள்ள செந்தில்குமார் அறையின் பூட்டை உடைத்து ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இந்த பரபரப்பு ரெய்டுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
2006-10 வரை வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ₹2.13 கோடி சொத்து சேர்த்ததாக DVAC வழக்குப் பதிந்தது. இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த திண்டுக்கல் கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த HC, 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக SC-ல் அமைச்சர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில்தான் <<17421480>>ED<<>> சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஒருவாரமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,200-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,275-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ₹75,7600-ஆக இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமார் ₹1,520 குறைந்துள்ளது.
ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.
வீட்டில் உட்கார்ந்தபடியே வேலை செய்வதால் வரும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் இன்று. வீட்டிலிருந்து வேலை செய்வது சுகம்தான் என்றாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால், உடலும் மனமும் சோர்ந்து போகும். ஆகவே, வேலையின் இடையே சிறிது நேரம் நடைபயிற்சி செய்யுங்கள், நன்றாக தண்ணீர் குடியுங்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சிரித்து பேசுங்கள். உங்களுக்கு Work From home பிடிக்குமா?
Sorry, no posts matched your criteria.