India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் யார் என அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. இந்திய அணி இளம் வீரரான ஜெய்ஸ்வால்தான், அந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 12 சிக்சர்களை விளாசினார். இதுவே இந்திய வீரர் ஒருவர் ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் ஆகும்.
உள்நாட்டு பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு போலீசார் முன்னணி வகிப்பதை மீண்டும் ATS நிலைநாட்டியுள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உட்பட 3 முக்கிய தீவிரவாதிகளை பிடித்த ATS-க்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். <<17015271>>கோவை குண்டு வெடிப்பு<<>> குற்றவாளி சாதிக் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
✪<<17019849>>மதிமுகவில் மீண்டும்<<>> ஏற்பட்ட பிளவு… வைகோ வைத்த குற்றச்சாட்டு
✪<<17018190>>CM நாற்காலி காலியாக <<>>இல்லை என சித்தராமையா திட்டவட்டம்
✪<<17020090>>விவாகரத்து புரளிக்கு<<>> நயன்தாரா கொடுத்த பதிலடி
✪<<17020693>>3-வது டெஸ்டில் <<>>நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்
✪<<17019270>> <<17019270>>வெயிலுக்கு ஒரு <<>>வாரத்தில் 2,300 பேர் பலி
பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. இது அவரின் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியதோடு, பலரும் சமுகவலைதளங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்தத் தகவலை ஆஷா போன்ஸ்லேயின் மகன் ஆனந்த் போன்ஸ்லே மறுத்துள்ளார். ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக பரவும் தகவலில் உண்மையில்லை, அவர் நலமாக உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூரில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் ஆபரணத் <<17014491>>தங்கத்தின் விலை<<>> இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹680 குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த வியாழனில் (ஜூலை 3) 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹72,840 ஆக இருந்தது. அதேநேரத்தில், இன்றைய நிலவரப்படி, 1 சவரன் ₹72,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.
இபிஎஸ்ஸை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடந்த விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டை தமிழ்நாடு என கூறக்கூடாது எனும் கூட்டத்துடன் அதிமுகவை இபிஎஸ் சேர்த்து விட்டார் என்று விமர்சித்தார். அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ், தற்போது தமிழகத்தை மீட்கப் போவதாக கூறி, ஒரு பயணத்தை தொடங்கி இருப்பதாகவும் ஸ்டாலின் சாடினார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரே வாரத்தில் 2,300 பேர் பலியாகியுள்ளனர். ஜூலை 2 வரை 10 நாள்கள் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெயில் அடித்ததாகவும், குறிப்பாக ஸ்பெயினில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் பார்சிலோனா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் 2,300 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவை வைகோ ஆரம்பித்தபோது அவருடன் இருந்த மூத்த தலைவர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன், கண்ணப்பன் உள்ளிட்டோர் மதிமுகவில் இருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டனர். இதனால் மதிமுகவின் செல்வாக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே மோதல் நீருபூத்த நெருப்பாக உள்ளது. மல்லை சத்யா வெளியேறினால், மீண்டும் அக்கட்சியில் பிளவு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பிரிய வேண்டும் என யாருக்கு ஆசையோ தெரியவில்லை. சமீபத்தில் இந்த விவாகரத்து புரளி காட்டுத்தீயாக சோஷியல் மீடியா தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை பரவியது. இந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒன்றை போட்டோவில் நயன் பதில் அளித்துள்ளார். விக்கியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, Our reaction when we see loopy news about us என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.