News March 17, 2025

குடிநீரால் நின்ற திருமணம்.. கண்ணீரில் மணமக்கள்!

image

இதுக்கெல்லாமா கல்யாணம் நிற்கும் எனச் சிந்திக்க வைக்கிறது இந்த சாம்ராஜ்நகர் சம்பவம். கர்நாடகாவின் ஹிரியூரில் மனோஜ் – அனிதா ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவுக்கு தாமதமாக வந்த சிலருக்கு தண்ணீர் பாட்டில் வைக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மோதலால் கல்யாணமே நின்றுபோய் கடைசியில் கண்ணீருடன் இளம்ஜோடி மண்டபத்தை காலி செய்த அவலம் நடந்துள்ளது.

News March 17, 2025

பாஜகவின் வினோஜ் பி.செல்வம் கைது

image

டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி, அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொள்ள ரெடியாக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

News March 17, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது

image

விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, மறைந்த மருத்துவர் செரியன், முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மேலும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

News March 17, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,210க்கும், சவரன் ₹65,680க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் வாரத்தின் முதல் நாளிலேயே விலை சற்று சரிவைக் கண்டுள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

News March 17, 2025

3 மொழி கற்பது நல்லது தான்: இன்ஃபோசிஸ் EX CFO

image

மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிந்து வரும் சூழலில், அதற்கு இன்ஃபோசிஸின் முன்னாள் CFO மோகன்தாஸ் பாய் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பணியாற்ற கூடுதல் மொழி அறிவு நிச்சயம் பயன்படும் என அவர் கூறியுள்ளார். மும்மொழிக் கொள்கை இந்தியர்களின் பணித்திறனுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட் செய்யுங்கள்!

News March 17, 2025

பரபரப்பான சூழலில் இபிஎஸ் அவசர ஆலோசனை

image

தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

News March 17, 2025

பெண்களுக்கு அடையாள அட்டை

image

மகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கிய பின், வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். அதேபோல், அரசின் பல்வேறு நல உதவிகளும், அவ்வப்போது அறிவிக்கப்படும் பலன்களும் சென்றடைய வழி ஏற்படும்.

News March 17, 2025

நானும் COOL மனநிலையை இழந்திருக்கிறேன்: தோனி

image

கேப்டன் COOL என பெயர் வாங்கிய தோனி, ஒருமுறை அந்த மனநிலையை இழந்துவிட்டதாக மனம் திறந்திருக்கிறார். 2019ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது மைதானத்திற்குள் சென்று நோ பாலுக்காக வாதிட்டது, தான் செய்த மிகப் பெரிய தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். கூலான மனநிலையை எப்போதாவது இழந்ததுண்டா என்ற கேள்விக்கு தோனி இந்த பதிலை அளித்துள்ளார். பெரிய வீரர் என்றாலும், அவரும் மனிதர் தானே!

News March 17, 2025

நலமுடன் பிரார்த்தனை செய்யும் போப் பிரான்சிஸ்

image

போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்யும் புதிய போட்டோவை வாடிகன் மாளிகை வெளியிட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனிடையே, ஜெமில்லி ஹாஸ்பிடலில், சக பாதிரியார்களுடன் திருப்பலியில் ஈடுபட்ட போப், தான் நலமுடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

News March 17, 2025

மம்தாவுக்கு நேரம் பார்த்து பதிலடி கொடுத்த யோகி!

image

கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மரண கும்பமேளா என மே.வங்க CM மம்தா விமர்சித்திருந்தார். இந்நிலையில், பர்கானாஸில் ஹோலியின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலியானதை சுட்டிக்காட்டியுள்ள உ.பி CM யோகி ஆதித்யநாத், சிறிய தொந்தரவுகளை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள், மகாகும்பமேளாவை விமர்சிக்கின்றனர் என்றார். நடந்தது மரண கும்பமேளா இல்லை; மரணத்தை வென்ற கும்பமேளா என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!