India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 54 லட்சம் பெண்களுக்கு மாநில அரசு அடையாள அட்டை வழங்கவுள்ளது. அந்த அட்டை எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொள்வோம். அந்த அட்டையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படம், சுய உதவிக்குழு உறுப்பினருக்கான அடையாளக் குறியீடு, அவரின் பெயர், குழு உருவாக்கப்பட்ட தேதி, பிறந்த தேதி, ரத்தவகை, செல்போன் எண், முகவரி, அஞ்சலக குறியீடு உள்ளிட்டவை இருக்கும்.
54 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதில் கிடைக்கும் பயன்களை தெரிந்து கொள்ளலாம். *அரசு பஸ்களில் 25 கிலோ வரை பொருள்களை இலவசமாக கொண்டு செல்லலாம் *கோ ஆப்டெக்ஸ் துணிகள் விலையில் 5% கூடுதல் தள்ளுபடி *கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை *சலுகை விலையில் ஆவின் நிறுவன பொருள்கள் *இணைய சேவை மையங்களில் 10% தள்ளுபடி *CM மருத்துவ காப்பீடு திட்ட பிரதான அத்தாட்சி.
யார் கிண்டல் செய்தாலும் ஒரு ஆணால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியே கிண்டல் செய்தால்? கர்நாடகாவை சேர்ந்த பராசிவமூர்த்தி என்பவரின் வழுக்கை தலையை சுட்டிக்காட்டி, உங்களுடன் வெளியே வரவே வெட்கமாக இருக்கிறது எனக் கூறி வந்துள்ளார் மனைவி மம்தா. மேலும், வரதட்சணை வழக்கிலும் அவரை சிறையில் தள்ளியிருக்கிறார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த மூர்த்தி, மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.
பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சீனா, தற்போது அந்நாட்டுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டுக்கு சீனா வழங்க வேண்டும். இது தவிர, 4 போர்க் கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. அரபிக் கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக பாகிஸ்தானின் கடற்படையை சீனா வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அண்ணாமலை, தமிழிசை, H.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜகவின் சரத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என X தளத்தில் கேள்வி எழுப்பி CM ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம், ராஜேந்திரன் எம்எல்ஏ (திருவள்ளூர்), திருவாலங்காடு கோயிலில் மாந்திரீக பூஜை செய்ய வசதி செய்து தரப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், அமைச்சர் இதற்கு விளக்கம் தருவாரா என நகைச்சுவையாக கேட்டார். இதைக்கேட்ட இபிஎஸ் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதையடுத்து எம்எல்ஏ ராஜேந்திரன், பரிகாரபூஜையையே மாந்திரீக பூஜை எனக் கூறியதாகக் கூறினார்.
காங்., மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(91) சென்னை அப்போலோ ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கெனவே வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், சென்னை வானகரம் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு அழைத்து வரப்பட்டு ICU வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
CSK Vs MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. ₹1,700 – ₹7,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை காலை 10:15மணி முதல் chennaisuperkings.com இணையதளத்தில் வாங்கலாம். C/D/E Lower – ₹1,700, I/J/K Upper -2,500 I/J/K LOWER – ₹4,000, C/D/E Upper – ₹3,500, kMK Terrace – ₹7,500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டும்தான்.
கான் விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற நடிகை எமிலி டெய்க்யூன்(43), உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அட்ரினோ கார்ட்டிகல் கார்சினோமா என்ற அரிதான புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ‘ரோசெட்டா’ படத்துக்கு கான் விருது வென்றதன் மூலம் புகழ்பெற்ற எமிலி, Our Children, The girl on the train உள்ளிட்ட படங்கள் மூலம் பிரெஞ்சு திரையுலகின் முக்கிய நடிகையாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு சர்வாதிகார ஜனநாயகம் தான் சரியாக வரும் என நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைமை இல்லாததுதான், இப்படியான பிளவுகளுக்கு காரணம் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.