India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த நாகலாந்து கவர்னரும், மூத்த அரசியல் தலைவருமான இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்தார். அவரை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் சிறப்புரையாற்றி இருந்தார் PM மோடி. இளைஞர்களுக்கான திட்டம், ஜிஎஸ்டி உள்பட 8 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், இவரது உரையை விமர்சித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ள PM மோடி, இம்முறை 103 நிமிடங்கள் பேசி அதிக வடைகளை சுட்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
✪தமிழகத்தில் <<17421791>>பெண்கள் <<>>பாதுகாப்பாக உள்ளனர்.. கவர்னருக்கு CM ஸ்டாலின் பதிலடி
✪அமைச்சர் ஐ. <<17422630>>பெரியசாமிக்கு <<>>சொந்தமான இடங்களில் ED ரெய்டு
✪தங்கம் <<17422026>>விலை <<>>மேலும் ₹40 குறைவு
✪உக்ரைனில் <<17420797>>போர் <<>>நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு.. டிரம்ப்
✪சென்னை <<17421191>>கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்<<>>: சாம்பியன் பட்டம் வென்றார் பிரனீஷ்
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், Box office-ல் மாஸ் காட்டுகிறது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ₹151 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளான நேற்று ₹50+ கோடி ஈட்டி, 2 நாளில் வசூல் ₹200+ கோடியை தாண்டியுள்ளது.
திமுகவில் ஐக்கியம் என்ற சர்ச்சைக்கு தனது செயல்பாடு மூலம் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் தம்பிதுரை முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு விழாவில் அவர் பேசுகையில், கூட்டணி கட்சிகள் இருந்தாலும், 2026-ல் EPS தனித்து ஆட்சி அமைப்பார் என்று சூளுரைத்துள்ளார்.
கேள்விகள்:
1. இந்தியாவில் எந்த மாநிலம் ‘மசாலாப் பொருள்களின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது?
2. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
3. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது?
4. மியான்மர் நாட்டின் பழைய பெயர்?
5. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல் அது என்ன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் காலை முதல் ED சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அத்துடன், அவரது அறைக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.
திக – திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர.திருவிடம் காலமானார். பெரியாரின் தொண்டன், கருணாநிதி, ஸ்டாலினின் ஆதரவாளரான அவர், தேர்தல் நேரத்தில் திமுக வெற்றிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டவர். ‘கலைஞரின் காலடிச் சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவரின் ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ நூலை உதயநிதி வெளியிட்டிருந்தார்.
‘MGR-ஐ வத்தலகுண்டுக்குள் வரவிட மாட்டேன்’ என 1973-ல் கூறி கவனம்பெற்று, திமுக ஒன்றிய தலைவரானவர் ஐ.பெரியசாமி. ஆத்தூர் MLA-வாக 1989-ல் முதல்முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தவர், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றார். 1996-ல் முதல்முறையாக அமைச்சராகப் பதவியேற்ற அவர், 2009 வரை மு.க.அழகிரியுடன் நெருக்கம் காட்டினார். அதன்பிறகு, தற்போது வரை ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார்.
Ex PM அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் நலனே தனது அரசியலின் நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவர், பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா மூலம் கிராமங்களுக்கு சாலை, சர்வஜனிக் கல்வி திட்டம் மூலம் கல்வி, – அந்த்யோதயா அன்ன யோஜனா மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் என மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியவர்.
Sorry, no posts matched your criteria.