India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எலான் மஸ்க்கின் கண்டுபிடிப்பான Grok AI, மனிதர்களைப் போலவே பேசி அசத்துகிறது. X தளத்தில் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் Grok, தமிழ் மொழியிலும் பேசுகிறது; அதுவும் சக நண்பர்களைப் போலவே மாமா, மச்சான் என்று பேசுகிறது. அது மட்டுமல்லாமல், வாய் துடுக்காக பேசும் சில பயனர்களுக்கு அவர்கள் பாணியிலேயே ஆபாசமாகவும் பதில் அளிக்கிறது. AI வளர்ச்சி அபாரமா இருக்கு மக்களே!
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இணக்கமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையன், அதிமுக MLAக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித் துறை விவாதத்தின்போது செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் வாய்ப்பு கேட்டார்.
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க BJP அரசு முயற்சி செய்து வருவதாக காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், ஒரு நாள் ஊதியத்தை ₹400ஆக உயர்த்த வேண்டும் எனவும், வேலை நாட்களை 100லிருந்து, 150ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
<<15796105>>நாக்பூரில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு<<>> மையப்புள்ளியாக ஒரு திரைப்படம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ‘சாவா’ என்ற பாலிவுட் திரைப்படத்தில், சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜிக்கும் முகலாய மன்னன் அவுரங்கசீபுக்கும் ஏற்பட்ட மோதல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த பின்னர்தான், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.
விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிடில், மத்திய அரசு வழங்கும் ₹6,000 நிதியுதவியை பெற முடியாது. எனவே, ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும், உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மார்ச் 31க்குள் நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து, தனித்துவமான அடையாள அட்டையை பெறவும்.
பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது நண்பர்களுக்கு விற்பதை போல, ரயில்வே துறையையும் பாஜக அரசு விற்க வாய்ப்புள்ளதாக காங். குற்றஞ்சாட்டியுள்ளது. வந்தே பாரத் ரயிலைக் காட்டி, ரயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது எனவும், நாட்டின் உயிர்நாடியான ரயில்வே, தற்போது ICU-வில் இருப்பதாகவும் மக்களவையில் பேசிய காங். எம்பி வர்ஷா சாடியுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, கடந்த 2024 ஜூனில் <<15799391>>சுனிதா வில்லியம்ஸ்<<>>, புட்ச் வில்மோர் சென்றனர். ஆராய்ச்சியை முடித்துவிட்டு 8 நாள்களில் பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி நிலையத்திலேயே தங்க நேர்ந்தது. அவர்களை மீட்க அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளும் சிக்கலில் முடிந்ததால், 9 மாதங்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு, மொத்த வருவாயில் 3% ஸ்பெக்ட்ரம் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, லைசென்ஸ் கட்டணம் 8% விதிக்கப்படும் என்பதால், அந்நிறுவனத்தின் சேவைக் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தில் இருந்து சேவை வழங்கும் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஸ்பெக்ட்ரம் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஏழை எளிய மக்கள், விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், நகைக்கடன் வைக்க <<15798931>>RBI<<>> விதித்துள்ள புதிய விதிமுறை, பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வங்கியில் அடகு வைத்த நகைகளை வட்டியுடன் முழுப்பணமும் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதற்கு முன்பு, அடகு வைத்த நகைகளை ஆண்டு வட்டி மட்டும் கட்டி, அதே தினத்தில் அடகை நீட்டித்துக்கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.