India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாக்பூர் கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்துக்களின் வீடுகள், கடைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பின்மை போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே, ‘சாவா’ படத்தை புகழ்ந்தும், அவுரங்கசீப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தும், கலவரத்திற்கு மூல காரணமாக பாஜக செயல்பட்டதாக காங். சாடியுள்ளது.
பிரபல மலையாள பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் (78) காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு கொச்சி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். மலையாளத்தில் 200 படங்களில் 700க்கும் மேற்பட்ட பாடல்களையும், பல படங்களுக்கு திரைக்கதை, வசனங்களையும் அவர் எழுதியுள்ளார். பாகுபலி, ஆர்ஆர்ஆர், அனிமல் உள்ளிட்ட படங்களுக்கு மலையாளத்தில் அவர் பாடல்கள், வசனங்களை எழுதியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் காட்டில் மழைதான். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் இவர்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். ஒருவருக்கு ஹேர்கட் செய்ய, ஆலிம் ரூ.1 லட்சம் பில் போடுகிறாராம். ஆலிமின் தந்தையும் சிகை அலங்கார நிபுணராக இருந்தவர்தான். அமிதாப், தீலிப் குமார் போன்ற ஹீரோக்களுக்கு அவர் ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்துள்ளார்.
IPL-2025 இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், கேப்டன்களின் சம்பளம் குறித்து விவாதம் நடந்து வருகிறது. அதிகபட்ச சம்பளமாக LSG கேப்டன் பண்ட் ₹27Cr, மிகக் குறைந்த சம்பளமாக KKR கேப்டன் ரஹானே ₹1.5Crம் பெறுகின்றனர். பண்டுக்குப் பிறகு ஐயர் (PBKS)₹26.75Cr, கெய்க்வாட் (CSK) ₹18Cr, சஞ்சு (RR) ₹18Cr, கம்மின்ஸ் (SRH) ₹18Cr, அக்சர் (DC) ₹16.50Cr, கில் (GT) ₹16.50Cr, பாண்ட்யா (16.35 Cr), ரஜத் (RCB) ₹11Cr.
அமெரிக்காவில் காய்கறிகளை தவிர்த்த இளம் பெண்ணுக்கு கிட்னியில் கற்கள் வளர்ந்ததாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். டிக்டாக் பிரபலமான கேத்ரின் carnivore diet என்ற முட்டை, தயிர், சிக்கன், பன்றி இறைச்சி மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். காய்கறி, பழங்கள், தானியங்களை தவிர்த்ததால் பைபர் சத்து குறைந்து கிட்னியில் கற்கள் வளர்ந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மக்களே உஷாரா இருங்க!
பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவின் அபு சிந்தி கொல்லப்பட்டது, மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சையதுக்கு குறிவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல யூடியூபர் சுஹெய்ப் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட மக்கள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையத் போன்ற தீவிரவாதிகளுக்கு ஏன் புகலிடம் தர வேண்டும். இந்தியாவை போல் ஏன் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர்.
அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) ரெய்டு நடத்தியுள்ளது. தரம் குறைந்த பொருள்கள் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்டையில், நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக BIS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக் பொருள்கள், வாட்டர் பாட்டில்கள் என 100க்கும் அதிகமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதில் கடந்த 16 ஆம் தேதி அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த சமூக ஊடக தளத்தில் இணைந்துள்ள பிரதமர் மோடி, தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.