India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்களுக்கு பிறகு நாளை அதிகாலை பூமிக்கு திரும்பவுள்ளார். இந்நிலையில், சுனிதாவுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், ‘நீங்கள் பல ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தபோதும், எங்கள் இதயத்தின் அருகிலேயே இருக்கிறீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பூமி திரும்பியதும் இந்தியாவுக்கு வருமாறு சுனிதாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சி ஆரம்பித்தது முதல் திமுக அரசையும், மத்திய பாஜக அரசையும் விஜய் சாடி வருகிறார். ஆனால் அதிமுகவை இதுவரை ஒருமுறை கூட விமர்சித்தது இல்லை. தலைவா படத்தால் அதிமுக, விஜய் இடையே முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும், கட்சி ஆரம்பித்தபிறகு அதுபற்றியும் விஜய் பேசவில்லை. இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், 2026 தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதோ என கேள்வி எழுப்புகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் 9 இந்திய வீரர்களும், 2 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் ரோஹித் ஷர்மாவின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார். கோலி, ரெய்னா, டிவில்லியர்ஸ், தோனி, பாண்ட்யா, சாஹல், சந்தீப் சர்மா, பும்ரா, மலிங்கா உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
விபத்துகள், வெள்ளம், பந்த் உள்ளிட்டவற்றால் ரயில் ரத்து செய்யப்படுமாயின், ஏற்கெனவே டிக்கெட் எடுத்தோருக்கு அக்கட்டணத்தை ரயில்வே திருப்பித் தரும். கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்திருக்கும்பட்சத்தில், டிக்கெட்டை 3 நாட்களுக்குள் எந்த கவுன்ட்டர்களிலும் திருப்பி அளிக்கலாம். முழு பணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைனில் டிக்கெட் எடுத்திருந்தால், அது தானாகவே ரத்தாகி பணம் வரவு வைக்கப்படும்.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வன், அண்மையில் ஆட்சியர், எஸ்பியை மாற்றி விடுவேன் என <<15605340>>பேசியது<<>> சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மணி எம்பி நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் விநோத நிகழ்வால் அவதிப்பட்டு வருகிறார் 50 வயதான சுப்ரமணியம். எங்கு சென்றாலும், தன்னை விரட்டி விரட்டி பாம்பு கடிப்பதாக அவர் குமுறுகிறார். 20 வயதில் தொடங்கி இப்போதுவரை பல டஜன் முறைகள் தன்னை பாம்பு கடித்ததாக கூறும் சுப்ரமணியம், வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தாலும் பாம்பு கடி தொல்லைக்கு தீர்வு கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கிறார். சம்பாதிப்பது எல்லாமே சிகிச்சைக்கே செலவாகி விடுகிறதாம்.
2014-15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிகழ்ந்த ரயில் விபத்துக்கள் 80% குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். லாலு, மம்தா அமைச்சர்களாக இருந்த போது ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையை விட தற்போது விபத்துகள் குறைந்துள்ளதாகவும், இது மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
TN மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 3 மாதங்களில் இது 10வது சம்பவம் என கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மறக்க முடியாத குழந்தை பருவ நினைவுகளில், தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதும் ஒன்று. பக்கத்து வீட்டிற்குள் பந்து போனால் அவுட், ஒன் பிட்ச் கேட்ச் அவுட் என நாம் வைப்பதே ரூல்ஸ். தெரு கிரிக்கெட் தொடர்பான ஆய்வில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்வது வருத்தமான முடிவு என தெரியவந்துள்ளது. 2வது இன்னிங்க்ஸ் பெரும்பாலும் ரத்தாவதால் அவர்கள் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உள்ளதாம். Share your Experience
மகாராஷ்டிராவில் அரசே வன்முறையை தூண்டுகிறது என AIMIM தலைவர் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொடுக்கும் அறிக்கைகள் & அவர்களது பேச்சுகளே வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றன என்றும், தங்களுடைய பொறுப்புகளை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார். நாக்பூர் வன்முறை, மகாராஷ்டிர அரசின் மிகப்பெரிய தோல்வி என்றும் ஓவைசி விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.