India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன், USA அதிபர் டிரம்ப் 2 மணி நேரம் போனில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்புகள், ஆற்றல் மையங்களில் தாக்குதல் நடத்துவதை 30 நாள்கள் நிறுத்தி வைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், முழுநேர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெற இருந்த KKR vs LSG ஐபிஎல் லீக் போட்டி மாற்றப்பட உள்ளது. அன்று ராமநவமி என்பதால், பாஜக சார்பில் 20,000 ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, போலீசாரால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதால், போட்டி மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து BCCIயிடம் தெரிவித்துவிட்டதாகவும் பெங்கால் கிரிக்கெட் அசோசியன் தலைவர் சிநேகாஷிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், நேற்று ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கை, மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதுவரை 12 வேலை நாள்களில் மொத்தம் 81,797 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs MI இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. காலை 10.15 மணிக்கு <
மத்திய அமெரிக்காவின் ரோட்டன் தீவில் நிகழ்ந்த <<15809134>>விமான விபத்தில்<<>> பிரபல இசையமைப்பாளர் ஆரேலியா மார்டினெஸ் (55) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கறுப்பினத்தில் பிறந்து கரிஃபுனா(Garifuna) இசைக் குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மார்டினெஸ், அந்நாட்டின் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முகமாக இருந்தவர். மார்டினெஸ் மறைவுக்கு ஹோண்டுரான் ஜனாதிபதி சியோமாரா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாவட்டங்களிலும் சுமார் 1,25,000 விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 லட்சம் பேர் பாதிப்படைவதுடன், நாளொன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்பும், சுமார் ₹30 கோடி இழப்பும் ஏற்படும் என கூறப்படுகிறது.
₹1000 கோடி <<15808812>>டாஸ்மாக் <<>>ஊழல் புகாரை அடுத்து, குவாட்டருக்கு ₹40 கூடுதலாக வசூலித்த விவகாரத்தையும் பாஜக அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து எச்.ராஜா, மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ₹40 என கணக்கிட்டால், அதில் மட்டும் மறைமுகமாக எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்?, அந்த பணம் யார் யாருக்கெல்லாம் செல்கிறது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன EV கார் தயாரிப்பு நிறுவனமான BYD, வணிக சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5-8 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம், தங்கள் காரை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 470KM தூரம் பயணிக்கலாம் என்கிறது. இதற்காக, சீனா முழுவதும் 4,000 அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது போட்டியாளர்களான Tesla, Benzக்கு சவாலாக கருதப்படுகிறது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இந்நிலையில், மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக்கூடாது என்றும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
9 மாதங்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் நலமுடன் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.