India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விராட் கோலி அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் சாக்கியா, சிலர் கோபப்படுவதற்காக பிசிசிஐ விதிகள் மாற்றப்படாது எனக் கூறினார். முன்னதாக, வெளிநாடுகளில் விளையாட செல்லும் இந்திய அணி வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் சிறுவயது நண்பர் தன்மாய் ஸ்ரீவஸ்தவா (46), இந்த IPLஇல் நடுவராக களமிறங்கவுள்ளார். கோலியும், ஸ்ரீவஸ்தவாவும் 2008இல் நடந்த UNDER 19 உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளனர். இப்போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்தவரே ஸ்ரீவஸ்தவாதான். ஆரம்பக்கால IPLஇல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பிறகு அம்பயரிங் ஃபீல்டை தேர்ந்தெடுத்தார்.
ED நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஐகோர்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் விவகாரத்தில் ED விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சோதனையில் டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு பின், ₹1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ED தெரிவித்தது.
ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஸ்டவ், தீப்பெட்டி, லைட்டர், பட்டாசு ஆகியவை அடங்கும். தடையை மீறி இவற்றை ரயில்களில் கொண்டு சென்றால், ரூ.1,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சேதம், உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் அவரே பொறுப்பாவார். SHARE IT.
Happy Street நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏவும், தவாக தலைவருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுவதாகவும், அது தமிழர்களின் நாகரிகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த நிகழ்ச்சிக்கு அரசு உடனே தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. GSLV LVM3 ராக்கெட்டுக்கான CE20 கிரையோஜெனிக் E15 இன்ஜினின் சோதனை இங்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 100 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை, நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. 22, 23ஆம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 24, 25ஆம் தேதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது.
‘இந்தியன் 3’ படம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கமல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 3 படத்தின் பாடல் ஒன்றை எடுக்க ஷங்கர் லைகா நிறுவனத்திடம் பெரிய தொகையை கேட்டதாகவும், அதை லைகா தர மறுத்ததால் ஷங்கர் படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இந்தியன் 3’ டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.