India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2008- 2024 வரையிலான ஐபிஎல்லில் அதிக கேட்ச் பிடித்த வீரர் யார் என பார்க்கலாம். ஆர்சிபி வீரர் விராட் கோலியே இந்த சாதனையை படைத்துள்ளார். 252 போட்டிகளில் விளையாடி 114 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, EX சிஎஸ்கே வீரர் ரெய்னா 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார். பொலார்ட், ரவீந்திர ஜடேஜா தலா 103 கேட்ச்களையும், ரோஹித் சர்மா 101 கேட்ச்களையும் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக பிஹாரில் 33.8% மக்கள் வறுமையில் வாழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்கண்ட் 28.8%, மேகாலயா 27.8%, உ.பி.22.9%, ம.பி.20.6%, ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல், வறுமையில் வாழும் மக்கள் குறைவாக (5%-க்கும் குறைவு) உள்ள மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் கேரளா 0.6% உள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (2.2%) உள்ளது.
பூமி மணிக்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கையில், பூமியில் இருக்கும் நாம் ஏன் கீழே விழாமல் அப்படியே இருக்கிறோம் என்பதற்கு அறிவியல் பூர்வமாக விடை அளிக்கப்பட்டுள்ளது. பூமியானது மனிதர்கள், செடி கொடிகள் உள்ளிட்ட அனைத்துடனும் சேர்ந்தே சுற்றுகிறது. இதனால்தான் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், கீழே விழாமலும் இருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட் வில்லன் நடிகரான மகேஷ் ஆனந்த், அமிதாப் பச்சன், அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நைட் கிளப்பில் உண்மையில் அக்சயுடன் கைகலப்பிலும் ஈடுபட்டார். நடிகை ரீனா ராணியின் சகோதரி பார்கா ராய், ரஷ்ய பெண் உள்ளிட்ட 5 பேரை திருமணம் செய்தும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. 57 வயதாகையில் 2019இல் அவர் உயிரிழந்தார். கடைசி காலத்தில் வறுமையில் வாழ்க்கையை கழித்தார்.
பர்ஸில் சில பொருட்களை வைத்திருப்பதன் மூலம் பணம் கொட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 1) லட்சுமி குபேர எந்திரத்தை மஞ்சள் துணியில் சுற்றி பர்ஸில் வைக்க வேண்டும். 2) அட்சதையை வைக்க வேண்டும். 3) கோமதி சக்கரத்தை வைக்கலாம். 4) வெள்ளி நாணயத்தை பச்சை பாலில் சில நிமிடம் வைத்திருந்து, அதனை சுத்தமான துணியால் துடைத்து மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கலாம். 5) தாமரை விதையை வைக்கலாம்.
2025ம் நிதியாண்டில் மார்ச் மாதம் 16ஆம் தேதி வரையிலும், மத்திய அரசுக்கு நேரடி வரி மூலம் ரூ.21.26 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வரிவருவாய் கடந்த நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் ரூ.18.80 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 13% அதிகம் ஆகும். இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் நேரடி வரி மூலம் ரூ.22.4 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஜிம் டிரெய்னர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கணேஷ் ஷர்மா (26) என்ற அந்த இளைஞர், உடற்பயிற்சி செய்து விட்டு உடைமாற்றும் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. மற்றவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தார். உடலில் எந்த காயமும் இல்லை. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
IPL-லில் CSK-வுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதிகமுறை(10) இறுதிப் போட்டிக்கு சென்ற ஒரே அணி சென்னையே. 2008 – Runners, 2009 -Semi final, 2010 – Champion, 2011 – Champion, 2012 – Runners, 2013 – Runners, 2014 – Play offs, 2015 – Runners, 2016 – Suspend, 2017 – Suspend, 2018 – Champion, 2019 – Runners, 2020 – League, 2021- Champion, 2022 – League, 2023 – Champion, 2024 – League, 2025 – ?
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் வரும் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஒவ்வொரு நகர்வையும் ஏற்கனவே கார்டூன் வடிவில் வெளியிட்டு அசத்தி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படத்தின் 2ஆவது பாடலான கனிமா வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.
மனைவிக்கு தவறான நடத்தையால் அவருக்கு பால்வினை நோய் உள்ளது, அவர் தனிமையில் ஆபாசப் படம் பார்க்கிறார். இது தனக்கு இழைக்கும் கொடுமை என்று கூறி கணவர் விவாகரத்து கேட்டிருந்தார். இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட், ‘குற்றச்சாட்டுகளை மனுதாரர் நிரூபிக்கவில்லை. மேலும், மனைவி தனிமையில் ஆபாச படங்கள் பார்ப்பது, தனிநபராக அவரது உரிமை, இது கொடுமை இழைப்பதாகாது’ என்று தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.