India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக அரசு, தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 2025ஆம் ஆண்டு முதல் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளிக்கூடத்தில் (சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல்) பயின்றாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பாலத்துக்கு அடியில் சிறுமியை(11) இழுத்துச் சென்ற 2 இளைஞர்கள், அவளின் மார்பகத்தில் கைவைத்து, பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ ரேப் வழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மார்பகத்தை தொடுவதும், கீழாடை நாடாவை அறுப்பதும் ரேப்புக்கு தயாராவதாக இருக்கலாம். ஆனால் ரேப் செய்ததாகாது என்றும், வழக்குப்பிரிவை மாற்ற உத்தரவிட்டும் தீர்ப்பளித்துள்ளது. உங்க கருத்து?
பிஹார், தெலங்கானாவை பின்பற்றி தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு எனவும், சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உ.பி.யில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் அருகே வீட்டுக்கு வெளியே ஒன்றரை வயது ஆண்குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பக்கத்துவீட்டுப் பெண், பிளேடால் குழந்தையின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு தப்பிவிட்டார். ஆபத்தான நிலையில், தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்விரோதம் காரணமாக அந்த பெண் அப்படி செய்ததாக கூறப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற சென்னையைச் சேர்ந்த பெண்கள் வரும் ஏப்.6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு CM ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீக்கும் மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், பிரிவதாக முடிவு செய்து விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினர். தனஸ்ரீக்கு 4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சாஹல் ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் இன்று நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என புகழேந்தி மர்மம் உடைத்துள்ளார். செந்தில் பாலாஜி பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாகவும், அதனால்தான் அவர் தற்போது வெளியில் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இது தெரியாமல் இந்த அரசு இருக்குமானால், அதை அவர்கள்தான் அனுபவிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
குட் பேட் அக்லி பட டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அனைத்தும் இணையத்தில் பட்டையை கிளப்பியதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், வார இதழுக்கு இயக்குநர் ஆதிக் அளித்த பேட்டியில், அப்பாவுக்கும் மகனுக்குமான பிணைப்பு படத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். டீசரில் இளமையான, வயதான தோற்றங்களில் அஜித் இருந்ததால், அவர் 2 கதாபாத்திரங்களில் நடித்திருப்பாரோ என ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.
MTC, SETC, TNSTC உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (மார்ச் 21) முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் தர்பூசணி சாப்பிட பலரும் விரும்புகின்றனர். நீர்ச்சத்தை அதிகரிக்கும் தர்பூசணியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? 1 கப் தர்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரைட் உள்ளது. இதில், ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் குறியீடான கிளைசீமிக் இன்டெக்ஸ் 72 என்ற அளவில் இருக்கிறது. இது அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் குறைவான அளவே தர்பூசணி சாப்பிடுவது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.