News March 20, 2025

‘எம்புரான்’ அற்புதமான படைப்பு: ரஜினி வாழ்த்து

image

எம்புரான் திரைப்படம் அற்புதமான படைப்பு என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். என் அருமை மோகன்லால் மற்றும் பிருத்விராஜின் எம்புரான் திரைப்பட டிரெய்லரை பார்த்தேன். அற்புதமான படைப்பு. வாழ்த்துகள் என X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2025

கெத்தான 10 கேப்டன்கள்.. வந்துருச்சு புது கோப்பை

image

IPL திருவிழா வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அண்ணன் தம்பியாக இருந்த ரசிகர்கள் கூட அடுத்த 2 மாதங்களுக்கு எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள். இதனிடையே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 அணி கேப்டன்களும் பங்கேற்றனர். அனைத்து கேப்டன்களும் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருஷம் கப்ப தூக்கப் போறது யாரு?

News March 20, 2025

கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!

image

காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

News March 20, 2025

ஔரங்கசீப் சமாதியைச் சுற்றி தடுப்புகள் அமைப்பு

image

தொடர் வன்முறை காரணமாக ஔரங்கசீப் கல்லறையை தகடுகளை வைத்து தொல்பொருள் துறையினர் மூடியுள்ளனர். ஔரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி மகாராஷ்டிராவில் இந்துத்துவ அமைப்புக்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பல இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில், ஔரங்கசீப் கல்லறையை சுற்றி தற்போது காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2025

குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

image

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.

News March 20, 2025

UPS பென்ஷன் திட்டம்: முக்கிய அம்சங்கள்

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மூலம் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாக பெறலாம். இதற்கு 25 ஆண்டுகள் பணியாற்றி இருப்பது அவசியம். 10 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 பென்சன் கிடைக்கும். பணியின்போது ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு 60% ஊதியம் பென்சனாக கிடைக்க UPS வகை செய்கிறது.

News March 20, 2025

இரட்டை நாக்கு ஏன்? எ.வ.வேலு கோபம்

image

தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்ற பாமக MLA ஜி.கே மணியின் கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக பதிலளித்துள்ளார். திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க அரசு தயாராக இருந்தும், அந்த பணிகளை மேற்கொள்ள விடாமல் போராட்டம் என்ற பெயரில் பாமக தடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தருமபுரியில் சிப்காட் அமைக்க கேட்பது பாமகவின் இரட்டை நாக்கை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

News March 20, 2025

இந்தியா மகிழ்ச்சியான நாடாக மாற என்ன செய்யலாம்?

image

<<15824235>>மகிழ்ச்சி<<>> குறித்து வெளியான பட்டியல் இந்தியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நடக்கும் உக்ரைன், பாலஸ்தீன மக்களை விட நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அதற்குக் காரணம். 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 118வது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னே இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வர என்ன செய்யலாம்?

News March 20, 2025

சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு சிக்கல்!

image

சனி பகவான் மார்ச் 29இல் மீன ராசியில் நுழைவதால் 3 ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) மேஷம்: பணப்பிரச்னை ஏற்படும். உடல்நல பாதிப்பு உண்டாகும். தொழிலில் தடை உருவாகும். 2) கும்பம்: வேலையில் இடையூறுகள் ஏற்படும். பணம் கையில் நிற்காது. குடும்பத்தில் மோதல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. 3) மீனம்: உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். நிதிநிலை சீராக இருக்காது. நம்பிக்கை குறையும்.

News March 20, 2025

1,000 சிக்ஸர்… 275 ரன்கள்: ராபின் உத்தப்பா கணிப்பு

image

2025 ஐபிஎல் சீசனில் 1,000 சிக்ஸர்களை வீரர்கள் அடிப்பார்கள் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை புதிய பரிமாணத்திற்கு ஐபிஎல் கொண்டு சென்றுள்ளதாகவும், கிரிக்கெட்டை நேசிப்பவர்களுக்கு ஐபிஎல் வரமாக உள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணி 275க்கும் அதிகமான ரன்களை குவிக்கும் என்றும் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!