News March 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 213
▶குறள்: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
▶பொருள்: பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

News March 21, 2025

மார்ச் 28இல் ‘தி டோர்’ ரிலீஸ்

image

பாவனா நடித்துள்ள ‘தி டோர்’ திரைப்படம், மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய் தீவ் இயக்கும் இந்தப் படத்தை ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நவீன் ராஜா தயாரித்துள்ளார். மிஸ்ட்ரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா அளவில் ரிலீஸாகிறது. சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ ஃபாலோ பண்ணுங்க.

News March 21, 2025

இன்றைய (மார்ச் 21) நல்ல நேரம்

image

▶மார்ச் – 21 ▶பங்குனி – 07 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 AM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News March 21, 2025

8ஆவது முறையாக பின்லாந்து முதலிடம்

image

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக 147 நாடுகளில் மக்களின் சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இந்தப் பட்டியலில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது.

News March 21, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 21, 2025

கோலியின் ஷூ அணிந்து சதம் விளாசினேன்: நிதிஷ்

image

விராட் கோலியின் ஷூ அணிந்துகொண்டு சதம் விளாசியதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் நிதிஷ்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், “ஒருமுறை சர்ஃப்ராஸ் கானிடம் ஷூ சைஸ் என்ன என விராட் கேட்டார். அவர் 9 எனக் கூறியதும், என்னிடம் கேட்டார். நான் 10 சைஸ் எனக் கூறியதும் ஷூவை என்னிடம் கொடுத்தார். கோலியின் ஷூவை வாங்க வேண்டும் என்ற ஆசையில் அவ்வாறு கூறி பெற்றுக்கொண்டேன்” என்றார்.

News March 21, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 21, 2025

F1 ரேஸர் ஷூமேக்கரை அறிமுகம் செய்தவர் மரணம்

image

அயர்லாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரும், புகழ்பெற்ற F1 அணியின் உரிமையாளருமான எடி ஜோர்டன்(76) காலமானார். உலகின் தலைசிறந்த கார் பந்தய வீரர் என அறியப்படும் ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமேக்கரை அறிமுகப்படுத்தியது இவரது ஜோர்டன் கிராண்ட் பிரிக்ஸ் அணிதான். 1970- 1980 காலக்கட்டத்தில் கார் பந்தய வீரராக ஜொலித்த எடி ஜோர்டன், அதன் பிறகு கார் பந்தய அணியை உருவாக்கி F1 பந்தய உலகிற்குள் நுழைந்தவர் ஆவார்.

News March 21, 2025

200 ரூபாய்க்கு பேரனை விற்ற மூதாட்டி!

image

முதுமையில் வறுமை வாட்டிய ஒருவரால் என்ன செய்ய முடியும்? ஒடிஷாவில் வீடற்ற மூதாட்டி மாண்ட் சோரன், தனது 7 வயது பேரனை பராமரிக்க முடியாமல் அவனை ஒரு தம்பதியிடம் விற்றுள்ளார். இதற்காக அவர் வாங்கியத் தொகை ரூ.200 மட்டுமே. பேரன் ஒரு நல்ல இடத்தில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே அந்த பாட்டியின் எண்ணம். இதனை அறிந்த போலீசார், தம்பதியிடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர்.

News March 21, 2025

அபாய சங்கிலியில் தொங்கிய பை.. என்னடா இது?

image

ரயில் பயணத்தில் வட மாநிலத்தவர் பண்ணும் அட்டகாசத்துக்கு எல்லையே இல்லை. அப்படி ஒரு சம்பவம் சென்னையில நடந்திருக்கு. ரயிலின் அபாயச் சங்கிலியில் வட மாநில இளைஞர் ஒருவர் பையை தொங்கவிட்டுள்ளார். இதனால் ஆந்திராவிற்கு சென்ற ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நின்றது. இதனால் ரயில்வே கேட்டில் காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் அவதி அடைந்தனர்.

error: Content is protected !!