India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசியல் ரீதியாக திமுக மட்டுமே அதிமுகவிற்கு எதிரி, மற்ற யாரும் (பாஜக) எதிரி இல்லை என இபிஎஸ் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது; மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு எனக் கூறிய அவர், தேர்தல் வரும்போது கூட்டணியை முடிவு செய்வோம் என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு BJP- ADMK கூட்டணிக்கு அச்சாரமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இபிஎஸ் வலது கையாக செயல்படும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. அதில், இபிஎஸ் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; மீண்டும் அவர் பாஜக உடன் கூட்டணி வைத்தால், மீண்டும் இணைவேன் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி; இதை யாரும் நம்ப வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
IPL 2025ல் எந்த அணி வெற்றி பெறும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். * சேவாக்- LSG, * கில்கிறிஸ்ட்- PBKS, * ரோஹன் கவாஸ்கர்- RCB, * பொல்லாக்- MI/SRH * திவாரி- SRH * சைமன் டவுல்- PBKS * எம்பாங்வா- GT * ஹர்ஷா போக்லே, மைக்கேல் வாகன் – MI. எந்த அணி வெற்றி பெறும் என்று நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க.
திமுக ஆட்சிக்கு வந்த 4 வருடங்களில் ₹4.53 லட்சம் கோடி பெற்றுள்ளது. ஆனால், அதிக கடன் வாங்கியதை மறைத்து சதவீத கணக்கு காட்டி தங்கம் தென்னரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிதியமைச்சர் பட்ஜெட் பதிலுரையில் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்ததாக விமர்சித்த அவர், நிதி மேலாண்மை குழு அமைத்து கடன் வாங்கியது தான் திமுகவின் சாதனை என்று சாடினார்.
சின்ன வெங்காயம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மொத்த சந்தைக்கு வழக்கமாக வரும் 4,000 மூட்டைகளுக்கு பதிலாக இன்று 7,000 மூட்டைகள் வந்ததே இதற்கு காரணமாம். இதனால் விலை குறைந்து 1 கிலோ ₹15- ₹30க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ₹70 வரை விற்பனையானதாகவும், இந்த விலை குறைவு ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
தஞ்சை பெருமாள் கோயில் அறங்காவலராக இஸ்லாமியரை அறநிலைத்துறை நியமித்ததாக எச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில் பெருமாள் கோயில் அறங்காவலராக தேர்வான நர்க்கீஸ்கான் இஸ்லாமியர் இல்லை. மிகச் சிக்கலான பிரசவத்தில் பிறந்ததால், பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கான் பெயரை, அவருக்கு பெற்றோர் வைத்துள்ளனர் என்று TNFactCheck தெரிவித்துள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்னும் 25 நாட்களில் தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். 2026 சட்டசபை தேர்தலே தங்கள் இலக்கு என விஜய் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை விஜயலட்சுமி வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சீமானுக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் விவரத்தைத் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள் திமுகவினர்; ஆனால், வேறு எங்கோ ஒருவர் சாணக்கிய தந்திரத்தோடு கணக்குப்போட்டு, அதிமுகவை அபகரிக்க முயற்சிப்பதாக பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தார். உடனே எழுந்து பேசிய தங்கமணி, கூட்டணிக் கணக்கில் நாங்கள் ஏமாற மாட்டோம் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
Sorry, no posts matched your criteria.