India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரும்பாலான வீடுகளில் 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை புதிய அறிவுறுத்தலை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, கேன்களை 50 முறைக்கு மேல் தண்ணீருக்கு பயன்படுத்தக் கூடாது, அழுக்கடைந்த, கீறல் விழுந்த மற்றும் சூரிய ஒளியில் நேரடியாக இருக்கும் கேன்களை பயன்படுத்தக் கூடாது. உடல்நலத்துக்கானது என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம், நடிகை மஹிரா சர்மாவும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் அளித்து மஹிரா சர்மா சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், நாங்கள் 2 பேரும் காதலிப்பதாக வெளியாகும் செய்திகள் அடிப்படை முகாந்திரமில்லாதவை, அதில் உண்மையில்லை என்றும், இத்தகைய வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் உருவான
‘லூசிபர்’, தரமான மாஸ் படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகமான ‘எம்புரான்’ உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 6.45 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. எம்புரான் படம் மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நீங்க டிக்கெட் வாங்கிட்டீங்களா?
இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா? தேஜஸ்தான். முதன் முதலாக 2017ல் அறிமுகமான தேஜஸ் மும்பையில் இருந்து கோவா வரையிலான 552 கி.மீ தூரத்தை 8 மணி 30 நிமிடங்களில் கடந்தது. 2019ல் தமிழகத்தில் அறிமுகமான தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து மதுரைக்கு 6 மணி 30 நிமிடங்களில் சென்றடைந்தது. அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆனால், தண்டவாள கட்டுப்பாட்டால் 130 கி.மீ வேகத்திலேயே இயக்கப்படுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு உச்சம் தொட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 14 நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.2,600 கோடி அதிகரித்து, ரூ.56.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
குத்துச்சண்டை விளையாட்டின் ‘லெஜெண்ட்’ ஜார்ஜ் ஃபோர்மேன்(76) காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒலிம்பிக் சாம்பியன், 2 முறை ஹெவி வெயிட் உலக சாம்பியன் என பாக்ஸிங்கின் உச்சத்தை தொட்டவர். கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிரம்பிய இவரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் பலரும், இவர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அரசு BIG BROTHER-ஆக செயல்பட வேண்டும் தவிர BIG BOSS-ஆக செயல்படக் கூடாது என பிஆர்எஸ் கட்சி தலைவர் கே.டி.ராமா ராவ் கூறியுள்ளார். தொகுதி மறுவரை தொடர்பாக இப்போது ஏன் பேசுகிறீர்கள் என சிலர் கேள்வி எழுப்புவதாகவும், இப்போது இந்த பிரச்னையை பேசவில்லை என்றால் வரலாறு தங்களை மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் உரிமை பறிபோவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீரர்களை பார்த்துவிட்டது. ஆனால், அதில் 9 பேர் மட்டுமே 18வது சீசனிலும் விளையாடுகிறார்கள். இந்த பட்டியலில், தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரும் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுவர். மீதியுள்ள ஆறு பேர் யார் தெரியுமா? ஜடேஜா, அஸ்வின், ரஹானே, மனீஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்வப்னில் சிங் இவர்கள்தான் அது. 9 பேருமே இந்திய வீரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
ஆசிரியர்கள் சமூகத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள். சில ஆசிரியர்களின் செயல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் களங்கமாக்கி விடுகிறது. இத்தாலியில் பள்ளி ஆசிரியராக இருந்த எலெனா மரகா(29), Onlyfans என்ற ஆபாச இணையதளத்தில் தனது வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார். ஆசிரியராக பெறும் மாத ஊதியத்தை ஆபாச இணைய தளத்தில் ஒரே நாளில் சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது, அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
TNPSC உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோரில் சிலர், தேர்வுக்கு எப்படி தயாராவது என தெரியாமல் இருப்பர். அவர்களுக்கென மாநில அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு ஒளிபரப்பப்படவுள்ளது. இதன் மறுஒளிபரப்பு அன்றைய தினம் இரவு 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஒளிபரப்பப்படவுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.