India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து தோனி களமிறங்க உள்ளதால், அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். அதேபோல், இந்த ஒரு போட்டிக்கு மட்டும் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார். இந்த போட்டியில் பாண்டியா விளையாடமாட்டார்.
‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் ₹100 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், வெளிநாட்டு உரிமையை பார்ஸ் நிறுவனம் ₹78 கோடி கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளுக்கான வியாபாரமும் சூடுபிடித்துள்ளதாம்.
பொதுவாக ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பது தான் கடினம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் புத்திசாலி பெண்களுக்கு வரன் கிடைப்பதுதான் மிகவும் கஷ்டம். ஏன் என்றால் அவர்கள் Smart ஆன ஆண்களையே தேடுவார்கள். அதேசமயம் ஆண்களோ தன்னைவிட அறிவாளிகளை விரும்புவது கிடையாது. இதனால் புத்திசாலி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது
சிக்கல். புத்திசாலிகள் careerக்கு முக்கித்துவம் கொடுப்பதால் காதலிலும் விழுவதில்லை.
வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தனது கணவர் நாராயண மூர்த்தி சொன்னதற்கு அவரது மனைவி சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார். தனது கணவர் அப்படி நேரம் பார்க்காமல் உழைத்ததால்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்க முடிந்ததாகவும், இன்ஃபோசிஸை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய மந்திரக்கோல் கடின உழைப்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்வத்துடன் வேலை செய்தால் நேரம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும். *ஓய்வும், சலிப்பும் தற்கொலைக்கு சமமானது. *கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
நாக்பூர் கலவரக்காரர்களிடம் இருந்தே, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்ததற்கான காசு வசூல் செய்யப்படும் என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில், அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் எனவும், வீடுகளை இடிக்க புல்டோசர்கள் கூட பயன்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது.
*1931 –காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். *1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது. *1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். *1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. *உலக வானிலை நாள்
ஆஸ்திரேலியா வீரர்கள் என்றாலே களத்தில் மற்றவர்களை வம்புக்கு இழுப்பதையே நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் மாறுபட்டவர் டேவிட் வார்னர். பேட்டிங் மட்டுமல்லாமல், ஜாலியாக ரிலீஸ் போட்டு கலக்குவதிலும் மன்னன் வார்னர். ராபின்ஹூட் என்ற தெலுங்கு படத்தில் தற்போது வார்னர் நடித்துள்ளார். இதற்காக அவர் ₹4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வார்னரை நடிகராக பார்க்க ஆசையா?
நடிகர் சுஷாந்த் சிங் மரணம், தொடர்பான அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தற்கொலைக்கு எந்த தூண்டுதலும் இல்லை என தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2020ல் சுஷாந்த் சிங் தன் இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சுஷாந்தின் தந்தை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 215 ▶குறள்: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ▶பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
Sorry, no posts matched your criteria.