India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசியல் வாழ்க்கை சற்று கடினமாக இருப்பதாக ஏற்கெனவே பாஜக MP கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இந்நிலையில், அரசியல் சுற்றுப்பயணங்களின் போது கழிப்பறை பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமாவில், பெண்கள் மாதவிடாய் நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாப்கின்களை மாற்ற நேரமும், இடமும் இருக்கும் என்ற அவர், அரசியலில் அதன் நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகனும் MLA-வுமான செந்தில்குமார் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ED ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக, MLA விடுதியில் உள்ள செந்தில்குமார் அறையின் பூட்டை உடைத்து ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இந்த பரபரப்பு ரெய்டுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
2006-10 வரை வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ₹2.13 கோடி சொத்து சேர்த்ததாக DVAC வழக்குப் பதிந்தது. இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த திண்டுக்கல் கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த HC, 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக SC-ல் அமைச்சர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில்தான் <<17421480>>ED<<>> சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஒருவாரமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,200-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,275-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ₹75,7600-ஆக இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமார் ₹1,520 குறைந்துள்ளது.
ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.
வீட்டில் உட்கார்ந்தபடியே வேலை செய்வதால் வரும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் இன்று. வீட்டிலிருந்து வேலை செய்வது சுகம்தான் என்றாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால், உடலும் மனமும் சோர்ந்து போகும். ஆகவே, வேலையின் இடையே சிறிது நேரம் நடைபயிற்சி செய்யுங்கள், நன்றாக தண்ணீர் குடியுங்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சிரித்து பேசுங்கள். உங்களுக்கு Work From home பிடிக்குமா?
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலையில் இருந்து ED சோதனை செய்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக கிடைத்த பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் ED அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளில், அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி & பொன்முடியை ED கைது செய்தது. தற்போது ஐபி மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக கவர்னர் R.N.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குற்றங்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.