News March 22, 2025

பிஞ்சுக் குழந்தையை சீரழித்த மனித மிருகம்

image

பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் என்றுதான் முடிவுக்கு வருமோ? மத்தியப் பிரதேசத்தில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர் ரேப் செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட குழந்தை அழுது கொண்டே நடந்தவற்றை தாயிடம் தெரிவித்துள்ளார். தாய் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற மனித மிருகங்களை என்ன செய்யலாம்?

News March 22, 2025

ஆக்ரோஷத்துடன் கமல் – சிம்பு!! வெளியான புது போஸ்டர்

image

நாயகனுக்கு பின் கமலும் மணிரத்னமும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் சிம்புவும் நடித்திருப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்போது படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கமல் மற்று சிம்புவின் ஆக்ரோஷமான புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

News March 22, 2025

ஆர்சிபிக்கு இதுலயும் சோகம்தான்

image

18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முந்தைய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது கொல்கத்தா அணிதான். இதுவரை 34 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய நிலையில், 20 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 14 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இன்று போட்டியில் வெல்லப்போவது யார்? கமெண்ட் பண்ணுங்க

News March 22, 2025

IPL: கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்…!

image

18வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. கடந்த முறை கோப்பையை கொல்கத்தா அணி வென்றதால், அந்த அணியின் Home Ground ஆன ஈடர்ன் கார்டன் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியும் சற்றுநேரத்தில் மோத உள்ளன. டாஸ் வென்று முதலில் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

News March 22, 2025

6 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழை கொட்டும்

image

இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை, சென்னை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News March 22, 2025

சூப்பர் ஓவர் விதியில் சூப்பரான மாற்றம்

image

ஐபிஎல் போட்டி டை ஆனால், ஒருமணி நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர் வேண்டுமானாலும் வீசலாம் என புதிய விதி வந்துள்ளது. போட்டி முடிந்து 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்க வேண்டும். அது டை ஆனால் 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் வீச வேண்டும் என்பது விதி. கடைசி சூப்பர் ஓவரை நேரத்தை பொறுத்து நடுவர் முடிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

பாலிவுட் நடிகர் ராகேஷ் பாண்டே காலமானார்

image

மூத்த ஹிந்தி, போஜ்பூரி நடிகர் ராகேஷ் பாண்டே (77) காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மும்பையின் ஜூஹூவில் உள்ள ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 1969ம் ஆண்டு வெளியான சாரா ஆகாஸ் படம் மூலம் அவர் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக குடியரசுத் தலைவர் விருதும் பெற்றார். ஹிந்தியில் தேவ்தாஸ், லட்சயா, பிளாக் படங்களிலும் நடித்துள்ளார்.

News March 22, 2025

உலகின் முதல் 6ஆம் தலைமுறை போர் விமானம்.. USA தயாரிப்பு

image

உலகிலேயே முதல் நாடாக 6ஆம் தலைமுறை போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அதன் பெயர் F47. இந்த விமானத்தை ரகசியமாக 5 ஆண்டுகளாக USA பறக்கவிட்டு சோதித்து வந்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் 6ஆம் தலைமுறை போர் தயாரிப்பு குறித்த தகவலை பகிர்ந்தார். போயிங் நிறுவனத்திடம் F47 விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது, உலகின் வேறு எந்த நாட்டிடமும் இதுபோன்ற விமானம் இல்லை எனவும் கூறினார்.

News March 22, 2025

18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை

image

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, மதுரை, தி.மலை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.

News March 22, 2025

மகளிர் உரிமைத் தொகை: 50 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. மேலும் தகுதியுடைய விடுபட்ட பெண்களும் விரைவில் அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு ரூ.1,000 வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை கோரி பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!