India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.
ஏப்.1ஆம் தேதி முதல் NPCI (National Payments Corporation of India) புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த உள்ளது. பயன்பாட்டில் இல்லாத, செயலற்ற மொபைல் எண்களை வரும் 31ஆம் தேதிக்குள் நீக்க வங்கிகள், UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கு செயலற்ற மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும். அதன் பின், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட PhonePe, Gpay சேவைகளைப் பெற முடியாது.
ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த 13 ஆம் தேதி ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கின. இந்தச் சூழலில், இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி அளவில் 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் நேரிட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
ஒடிசாவில் கடும் கோடை வெயில் காரணமாக 1-12ம் வகுப்பு வரை அரைநாள் மட்டும் (காலை 6.30 – 10.30 வரை) செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருவதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஒடிசாவை போலவே இங்கும் (TN) பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்கள் தங்கள் வங்கி முதலீடுகளை, பங்குச்சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமையும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முறையான ஆய்வுகள் செய்யாமல், மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மக்களின் முதலீடே வங்கிகளுக்கான நிதி ஆதாரமாகும். அந்த முதலீடுகள் குறைவது, வங்கிகளுக்கு சவாலாகும் என்றும் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 26 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே நேரம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நிதியுதவி, மானியம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு மூலம் கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு இனி அந்தந்த மாகாண அரசுகளிடமே ஒப்படைக்கப்படும்.
2021 தேர்தலில் தவாக தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் MLAஆக தேர்வானார். ஆனால், சமீபகாலமாக அவரின் செயல்பாடு மீது திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைப்பேன் என கூறியிருந்த நிலையில், நேற்று திமுக – வேல்முருகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால், வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் தவாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விதிமுறைகளை மீறியதாக திமுக MPக்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான கண்டன வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்துகொண்டு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தனர். உடை காரணமாக அவைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து மாநிலங்களவைச் செயலகம் இன்று முடிவெடுக்கவுள்ளது.
வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களே காரணம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். 1) வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2) கடவுளுக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது. 3) மாலையில் விளக்கேற்றவே கூடாது. 4) இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5) பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.
Sorry, no posts matched your criteria.