India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வந்துவிட்டதா? கமெண்ட்ல சொல்லுங்க.
வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ. 45,661.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிய வசதியாக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்வது, அதிக விளைச்சலை காட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தான் கேமியோ ரோலில் நடித்த ராபின்ஹுட் படத்தின் புரோமோஷனுக்காக, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஹைதராபாத் வருகிறார். வெங்கி குடுமுலா இயக்கிய இப்படத்தில் ஸ்ரீலீலா, நிதின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் 22ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் டேவிட் வார்னர் பங்கேற்க உள்ளார்.
சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏழைப்பெண்களுக்கு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்துக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிறு பால் பண்ணைகள் அமைக்க 4% மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை பாஜகவால் தர முடியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், அதில் அதிமுக நிச்சயம் இடம் பெறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெரியார், தங்களுக்கு கொள்கை ரீதியான தலைவராக இருந்தாலும், அவரது கடவுள் மறுப்பு, பிராமணர் எதிர்ப்பு கொள்கையை ஏற்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
உழவர்கள் மேம்பாட்டுக்காக ₹10 கோடி மதிப்பில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ₹1.60 கோடி நிதி ஒதுக்கீடு, பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பலா சாகுபடியை ஊக்குவிக்க ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உறிஞ்சி வேளாணை அழிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 2,500 ஏக்கரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்கு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இது சரியான வழியாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
2025 – 26 நிதியாண்டில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய ₹1,472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ₹10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ₹215லிருந்து ₹349ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
உழவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், உயர் மதிப்புமிக்க சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி மர வகைகளை வளர்க்கும் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என வேளாண் அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த மரங்களை வளர்ப்பது, பதிவு செய்வது, வெட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்வது ஆகியவை இதன் மூலம் எளிதாகும் எனவும், இதற்காக தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.