India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62) உடல்நலக்குறைவால் காலமானார். ஆக.2 ஆம் தேதி குளியலறையில் விழுந்ததால் சோரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
2021 வரை அதிமுக (மாநிலம்), பாஜகவுக்கு (மத்திய) எதிராக கடுமையான போராட்டங்களை விசிக முன்னெடுத்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்த பிறகு வேங்கை வயல், கவின் ஆணவக்கொலை, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றில் மென்மையான போக்கையே விசிக கடைபிடித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது 2026 தேர்தலில் விசிக களமிறங்கும் தொகுதிகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
‘குட் பேட் அக்லி’ முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘கூலி’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், முன்னணி ஹீரோக்களின் படங்களை அனைவரும் ரசிக்கும்படியாக எடுங்கள் என்ற கருத்தை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். இந்நிலையில், ‘AK 64’ படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அதன் இயக்குநர் ஆதிக் கூறியுள்ளார். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், MLA விடுதி, திண்டுக்கலில் உள்ள இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் ED விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இன்று கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் விரதமிருந்து நாள் முழுவதும் கிருஷ்ணரை வழிபடுவார்கள். பஞ்சாங்க கணிப்பின் படி, ஆகஸ்ட் 16 அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜைகளை செய்து வழிபடவும் உகந்த நேரமாகும்.
அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 32 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போவதாக IMD எச்சரித்துள்ளது. காஞ்சி, கடலூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், சேலம், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தோல்வி பயத்தால் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு செய்யாதவற்றை, மீதமுள்ள சில மாதங்களில் செய்வதாக வெளி வேஷம் போட்டு வருகிறார் என சாடிய அவர், தமிழகத்தின் தீய ஆட்சியான திமுக ஆட்சியை அகற்றுவதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். 2026-ல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்தார்.
டெஸ்ட், டி20-களில் ஓய்வறிவித்த ரோஹித், விராட் ODI-யில் மட்டுமே இனி விளையாடவுள்ளனர். இந்நிலையில் 2027 ODI உலகக்கோப்பை அணியில் அவர்கள் இடம்பெறுவது சிரமம் என பல மூத்த வீரர்கள் கருத்து கூறுகின்றனர். இதுபற்றி பேசிய ரெய்னா, ரோஹித் மற்றும் விராட் அனுபவம் அணிக்கு முக்கியமானது, ஆதலால் அணியில் இடம்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும், ஜூனியர்களுக்கு வழிகாட்ட அவர்கள் அணியில் இருப்பது அவசியமென்றார்.
Sorry, no posts matched your criteria.