News March 13, 2025

தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி மறைவு

image

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், தொல்லியல் அறிஞருமான மா.சந்திரமூர்த்தி (80) உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாகையை சேர்ந்த இவர், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவ அடையாளங்களைக் கண்டறிந்துள்ளார். நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் காரணமாக மறைந்த நிலையில், போரூரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

News March 13, 2025

‘தமிழ் வாழ்க’.. திருமணத்தில் கோஷமிட்ட புதுமண ஜோடி!

image

அரசு மட்டுமல்ல, தமிழக மக்கள் மத்தியிலும் ஆங்காங்கே மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனநிலையை காண முடிகிறது. சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றின் போது மணமக்கள் கையில் ‘தமிழ் வாழ்க’ என்ற பதாகைகளை ஏந்தி, மும்மொழிக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 13, 2025

பட்ஜெட்டில் ₹-க்கு பதில் ‘ரூ’

image

2025-26 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கான இலச்சினையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரூபாய் குறியீட்டிற்கு (₹), பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்தியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் ₹ பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மொழி சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ₹ என்ற குறியீட்டை தவிர்த்து, தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப் படுத்தி உள்ளார்.

News March 13, 2025

நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், தொகுதியில் கள நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News March 13, 2025

சீமானின் உதவியாளர், பாதுகாவலருக்கு ஜாமின்!

image

சீமானின் உதவியாளர் சுபாகர், பாதுகாவலர் அமல்ராஜூக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், இருவர் மீதும் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

‘இந்தி’ டியூசன் டீச்சருடன் உல்லாசமாக இருந்தவர் கைது!

image

சென்னை அருகே இந்தி டியூசனுக்கு சென்ற நபர், டீச்சருடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (33), 39 வயதான டீச்சரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் தனிமையிலிருந்துள்ளார். 6 வயது மூத்தவர் எனக் கூறி டீச்சரை விட்டுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யத் திட்டமிட்டதால், டீச்சர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால் யோகேஸ்வரன் கைதாகியுள்ளார்.

News March 13, 2025

மாநில தனிநபர் வருமானம் அதிகரிப்பு

image

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் ₹2.78 லட்சமாக அதிகரித்துள்ளது; இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

இது நவீன இந்தித் திணிப்பு : அன்புமணி காட்டம்

image

சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு <<15744608>>இந்தியில் <<>>மட்டும் பதிலளிப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழில் வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 13, 2025

அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்.. இபிஎஸ் இரங்கல்

image

வந்தவாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ குணசீலன் உடல்நலக்குறைவால் காலமானார். வந்தவாசி திமுக கோட்டையாக இருந்தது. அந்த கோட்டையை 2011இல் உடைத்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு குணசீலன் அபார வெற்றி பெற்றார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். மக்களின் அன்பை பெற்ற அவரது மறைவிற்கு இபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

லைவ் ஸ்ட்ரீமிங்கில் கொலை! Influencerக்கு நேர்ந்த கொடூரம்!

image

வாங்கிய கடனுக்காக இளம்பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவில் ஐரி (22), லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருந்தபோது, கடன் கொடுத்த டக்கனோ (42), அவரை கத்தியால் குத்தி இருக்கிறார். ‘ஹெல்ப்’ என ஐரியின் அலறல் சத்தம் மட்டுமே கடைசியாக கேட்டுள்ளது. அத்துடன் அவரது உயிர் பிரிந்து விட்டது. இப்போது, கடனுக்காக கொலை செய்த டக்கனோவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா? பணம் தான் திரும்ப கிடைக்குமா?

error: Content is protected !!