India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாங்கிய கடனுக்காக இளம்பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவில் ஐரி (22), லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருந்தபோது, கடன் கொடுத்த டக்கனோ (42), அவரை கத்தியால் குத்தி இருக்கிறார். ‘ஹெல்ப்’ என ஐரியின் அலறல் சத்தம் மட்டுமே கடைசியாக கேட்டுள்ளது. அத்துடன் அவரது உயிர் பிரிந்து விட்டது. இப்போது, கடனுக்காக கொலை செய்த டக்கனோவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா? பணம் தான் திரும்ப கிடைக்குமா?
TNல் 1967ல் ஆட்சியைப் பிடித்த திராவிட சித்தாந்தம் இன்று ஆலமரமாக பரவியிருக்கிறது. புதிதாக எந்த கட்சி உதயமானாலும், திராவிடம் என்ற கருப்பொருள் நிச்சயம் இருக்கும். அதற்கு விஜய்யும் விதிவிலக்கல்ல. ஆனால், மாற்றுக் கருத்தியல் கட்சியான பாஜக, அந்த கட்டமைப்பை உடைக்கும் அரசியலை தொடங்கியிருக்கிறது. பெரியாரை வைத்தே திமுகவை மடக்க, தமிழை கையில் எடுத்திருக்கிறது பாஜக என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து (2/2)
இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் எரிவாயு விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து புகார் அளித்தால், இந்தியில் பதிலளிக்கப்படுகிறதாம். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், உடனே தமிழில் சேவை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்தின் போது, எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாக்ஷி பண்டிற்கு லண்டன் தொழிலதிபர் அங்கித் சவுத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. டேராடூனில் ஒரு சொகுசு ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு தோனி, ரெய்னா, பண்ட் ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோ தான் நேற்று இணையத்தில் வைரலானது.
அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு அட்லீ பெரிய பட்ஜெட்டை நீட்ட, சன் பிக்சர்ஸ் ஒதுங்கி விட்டதாம். அடுத்ததாக இப்படத்தை அல்லு அர்ஜுன், தில் ராஜுவிடம் எடுத்து செல்ல அட்லீ ₹100 கோடி சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே, அட்லீயின் குருவால் சுமார் ₹150 கோடி வரை இழந்த தில் ராஜூ, எப்படி மீண்டும் இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என யோசனையில் இருக்கிறாராம். சம்பளமே ₹100 கோடினா… பட்ஜெட் எவ்வளவு இருக்கும்?
மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா Ex CM நவீன்பட்நாயக், ஆந்திர Ex CM ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா CM ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
மனித தோலுக்கு ஒத்த பண்புகளை கொண்ட செயற்கைத்தோலை ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரோ ஜெல் என அழைக்கப்படும் இந்த பொருள், உடலில் ஏற்படும் காயத்தை 4 மணி நேரத்தில் 90% அளவுக்கு குணப்படுத்திவிடுமாம். அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக காயம் ஆறிவிடுமாம். இந்த புதிய கண்டுபிடிப்பு செயற்கைத்தோல் தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.
இன்ஸ்டா மோகம் எவ்வளவு ஆபத்தில் முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது இச்சம்பவம். கேரளாவில் இன்ஸ்டாவில் பிரபலமாக நினைத்த இளம்பெண் ஒருவர், ஹபீஸ் சஜீவ் என்ற இன்ஸ்டா பிரபலத்துடன் சேர்ந்து பல வீடியோக்கள் செய்துள்ளார். பெண்ணுடன் வீடியோ எடுக்க அவரது வீட்டுப் பக்கத்தில் குடிபெயர்ந்த ஹபீஸ், அவரை பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. பெண் அளித்த புகாரின் பேரில் ஹபீஸ் சஜீவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படும் கல்யாணத்தை, இதற்கெல்லாமா நிறுத்துவாங்க எனத் தோன்றுகிறது. தனது வருங்கால கணவர் தன்னிடம் சொல்லாமல், அவரின் தாயுடன் சேர்ந்து வீடு வாங்கியதால், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார். ‘கனவு இல்லத்தை நாங்கள் இருவரும் சேர்ந்து வாங்குவோம் என எதிர்பார்த்தேன், அவரின் தாயுடன் எப்படி நான் வீட்டை பகிர்வது என்ற கேள்வியை அப்பெண் முன்வைக்கிறார்.
Sorry, no posts matched your criteria.