News March 12, 2025

மட்டன் கறி செய்யாத மனைவி அடித்து கொலை

image

தெலுங்கானாவில் மட்டன் கறி செய்ய மறுத்த மனைவியை கணவர் அடித்தே கொன்றுள்ளார். மஹபூபாபாத்தைச் சேர்ந்த மலோத் கலாவதியிடம் அவரின் கணவர் நேற்றிரவு மட்டன் கறி செய்யவில்லையா என தகராறு செய்துள்ளார். இதையடுத்து 2 பேர் இடையே சண்டை ஏற்பட்டதில், மனைவியை அவர் அடித்து கொலை செய்து விட்டதாக கலாவதியின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

News March 12, 2025

VOTER ID-யுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்: EC

image

VOTER ID-யுடன் ஆதார் இணைப்பை தேர்தல் ஆணையம் (EC) கட்டாயமாக்கியுள்ளது. சில மாநிலங்களில் பலருக்கு ஒரே VOTER ID எண் இருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த 4ஆம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் VOTER ID-யுடன் ஆதார், செல் எண் இணைக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

News March 12, 2025

மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!

image

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக US இருதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

News March 12, 2025

இன்டர்நெட் பயனாளர்கள் 80 கோடியாக அதிகரிப்பு

image

இந்தியாவில் 80 கோடி பேர் இணையதள வசதியை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2025 ஜனவரி நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை 140 கோடி என்றும், அவர்களில் 53 கோடி பேர் வாட்ஸ்அப், 49 கோடி பேர் யூடியூப், 41 கோடி பேர் இன்ஸ்டாகிராம், 38 கோடி பேர் பேஸ்புக், 24 கோடி பேர் X ஆகிய தளங்களை பயன்படுத்துகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் எதை அதிகம் பயன்படுத்துவீர்கள்?

News March 12, 2025

சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்ட 500 இந்தியர்கள் மீட்பு

image

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதிக சம்பளத்தில் வேலை என்ற பொய் வாக்குறுதிகளை கூறி இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

News March 12, 2025

IND விளையாடாததால் ₹45 கோடி நஷ்டம்

image

2025 WTC ஃபைனல், லண்டனில் வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் AUS vs SA மோத உள்ளன. ஃபைனலில் IND விளையாடும் என்ற எதிர்பார்ப்பில், போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதான நிர்வாகம், டிக்கெட் விலையை 50 பவுண்ட் அளவுக்கு நிர்ணயித்து வைத்திருந்தது. இதன்மூலம், ₹45 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், IND அணி ஃபைனலுக்கு முன்னேறாததால், டிக்கெட் விலையை வழக்கமான விலைக்கு விற்க முடிவு செய்துள்ளது.

News March 12, 2025

இபிஎஸ்சை நெருங்கும் பாஜக.. அப்போ ஓபிஎஸ் கதி?

image

2026 தேர்தலில் அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கக்கூடும் என தகவல் வெளிவருகிறது. இதை உறுதி செய்வதுபோல, இபிஎஸ்சை பாஜக மூத்த தலைவர்கள் அண்மையில் சந்தித்துள்ளனர். இதை உற்றுநோக்கும் அரசியல் ஆர்வலர்கள், பாஜகவுடன் கைகோர்த்து செயல்படும் ஓபிஎஸ் கதி இனி என்னவாகும்? இபிஎஸ், ஓபிஎஸ், ஒரே கூட்டணியில் இணைவார்களா? இல்லை ஓபிஎஸ் தனித்து போட்டியிடுவாரா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News March 12, 2025

செளந்தர்யா மரணத்தில் சதியா? கணவர் விளக்கம்

image

<<15730975>>நடிகை செளந்தர்யா <<>>மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். செளந்தர்யா மரணத்துக்கும், நடிகர் மோகன்பாபுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தங்கள் நிலத்தை அவர் அபகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004இல் செளந்தர்யா பயணித்த ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2025

மும்மொழிக் கொள்கைக்கு அண்ணா ஆதரவு?

image

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். ஹிந்தியை தீவிரமாக எதிர்த்து ஆட்சியதிகாரம் பெற்ற அண்ணா குறித்து டிடிவி இவ்வாறு பேசியிருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக என இரு கட்சியினரும் டிடிவியை வசைபாடி வருகின்றனர். இவரது பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?

News March 12, 2025

25ஆவது படம் பிளாப்.. ஆனாலும் கலங்காத ஜிவி

image

தனது 25ஆவது படமான ‘கிங்ஸ்டன்’ சரியாக போகவில்லை என ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும், ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, தனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை யோசிக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது 20 ஆண்டுகால சினிமா அனுபவமும் தனக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்ததாக கூறியுள்ளார்.

error: Content is protected !!