India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடு கணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சென்செக்ஸ் 2025 டிச.க்குள் 1.05 லட்சத்தை தாண்டும் என கூறியுள்ளது. இது தற்போதைய நிலவரத்தை விட 41% அதிகம். இதேபோல், 2024 டிசம்பரிலும் அது கணித்திருந்தது. உலக அரசியல் சில நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.
IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், டிஜிட்டல் அரெஸ்டுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகள், 3,962 ஸ்கைப் ஐடிக்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்தால் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தனுஷ் உடனான மோதல் காரணமாக, ‘வட சென்னை 2’ படத்தை வேறு இயக்குநர், வேறு நடிகரை வைத்து தயாரிக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் இப்படத்தை இயக்க, மணிகண்டன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘வட சென்னை’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, ‘அசுரன்’ படத்தை எடுக்க வெற்றிமாறனை தனுஷ் நிர்பந்தித்தாகவும் ஒரு பேச்சு உள்ளது.
பாஜகவில் தாம் சேரவில்லை என்று சரத்குமாரின் ஆதரவாளரும், சுரண்டை தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமக-வை பாஜகவுடன் சரத்குமார் இணைத்ததில் உடன்பாடு இல்லை என்றும், தாம் எந்த கட்சியிலும் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் புளியங்குடியில் நடக்கும் பாஜக கூட்டத்தில் பங்கேற்போர் பெயர் பட்டியலில் தனது பெயரை அனுமதியின்றி போட்டதை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையது அபித் அலி (83) அமெரிக்காவில் காலமானார். இவர், 1967 முதல் 1974 வரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1,018 ரன்கள் குவித்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த இவர், ஓய்வு பெற்ற பின் அமெரிக்காவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பதற்காக அங்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.
தவெக தலைவர் விஜய்யை தினமலர் பத்திரிகை இழிவாக சித்திரித்திருப்பதாக அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய்யை ஆடு போல சித்திரித்திருக்கும் தினமலர், ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையை புகட்டுவது போல கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, தினமலர் வரம்பு மீறி செல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
Sorry, no posts matched your criteria.