India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஜான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முக்யமந்திரி சமுஹிக் விவாக் யோஜனா திட்டத்தின்கீழ் மாநிலத்தில் திருமணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என கூறினார். படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்கப்படும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
➤மேஷம் – அச்சம் ➤ரிஷபம் – சுகம் ➤மிதுனம் – ஆக்கம் ➤கடகம் – சலனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤கன்னி – சிரமம் ➤துலாம் – ஊக்கம் ➤விருச்சிகம் – நலம் ➤தனுசு – லாபம் ➤மகரம் – இரக்கம் ➤கும்பம் – ஜெயம் ➤மீனம் – புகழ்.
கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அதை போட்டோஷூட் நடத்தி அவர்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். விதவிதமான போஸ்களில் பெற்றோர் ஆவதை அவர்கள் கொண்டாடியுள்ளனர். பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. கடந்த 2023 ஜனவரியில் இவர்களுக்கு திருமணம் ஆனது.
நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு, டைரக்ஷனில் கவனம் செலுத்த ரவி மோகன் முடிவு செய்துள்ளார். இதற்காக ஷூட்டிங் இடையே கிடைக்கும் நேரங்களில் திரைக்கதை எழுதி வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இக்கதையில் ஹீரோவாக யோகிபாபு நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே தொடங்க உள்ளது. தனது டைரக்ஷன் கனவை பல பேட்டிகளில் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீட், ஹைட்ரோகார்பன், டங்ஸ்டன் சுரங்கம், பிஎம் ஸ்ரீ என கொல்லைப்புறமாக துரோகம் செய்த DMKவிற்கு, ADMKவை பற்றி பேச அருகதை இல்லை என EPS சாடியுள்ளார். BJPயுடன் கூட்டணியில் இருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம் என TNஐ காத்திட்ட இயக்கம் ADMK எனவும், தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க CMக்கு திராணி இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான <<15738675>>இறுதித்தேர்வு பட்டியல்<<>> வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை
வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021இல் டெஸ்ட்டில் இருந்தும், 2024இல் டி20இல் இருந்தும் ஓய்வு பெற்றார். எனினும் ODIஇல் தொடர்ந்து விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் விளையாடினார். இந்நிலையில், ODIஇல் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்டில் 5, ODIஇல் 4 சதங்கள் அவர் விளாசியுள்ளார்.
தென்காசி பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஊழல் கறை படியாத இடமே இல்லை என்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என விமர்சித்த அவர், தீய சக்திகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கிடைத்தாலும், தமிழகத்தை ரூ.9.5 லட்சம் கோடி கடனில் வைத்திருப்பதுதான் ஸ்டாலினின் செயல்திறன் எனவும் அவர் சாடினார்.
கோவிட்டிற்கு பின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால், ரெப்போ வட்டி விகிதத்தை RBI உயர்த்தியது. இதனால், வங்கிகளில் லோன் வாங்குவோர்/வாங்கியோர் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளதால், RBI ரெப்போ வட்டியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனின் வட்டியும் குறையும், இனி நீங்கள் வாங்கப் போகும் லோனின் வட்டியும் குறையும்
ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் இன்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுவர்களில் சில சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாணவர்களை வைத்தே அதை அழிக்கச் செய்தார்.
Sorry, no posts matched your criteria.