India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
கடும் சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தைகள், சுமார் $1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை இழந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ₹87 லட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் உச்சம் தொட்ட நிஃப்டி, அதிலிருந்து 16% மதிப்பினை இழந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டிருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஹலால் மட்டன் எதிர்ப்பு இயக்கம் தீவிரமாகிறது. இதற்கு அமைச்சர் நிதிஷ் ரானே தலைமை வகிக்கிறார். அவருக்கு தேஜகூ தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். ஆடு, காேழி ஆகியவற்றை இந்து மத வழக்கப்படி கொல்லும் ஜத்கா முறையை ஊக்குவிக்கின்றனர். ஹலால் சான்றுக்கு பதிலாக மல்ஹர் சான்று அறிமுகப்படுத்தப்பட்டு, ஜத்கா கடைகள் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளது. காய்கறிகள் மற்றும் இறைச்சியின் விலை குறைந்தது இந்த சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்குப் பின் கடுமையாக உயர்ந்த பணவீக்கத்தால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது, பணவீக்கம் குறைந்து வருவது, வங்கிகளின் வட்டி விகிதத்தையும் குறையச் செய்யும் என்கின்றனர் வல்லுநர்கள்.
தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 1 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாகரிகத்தை பற்றி பாஜக, நமக்கு பாடம் எடுக்கிறது. நாகரிகத்தை உலகுக்கே முதலில் சொல்லிக் கொடுத்தது தமிழர்கள்தான். அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசு பாஜக அரசுதான் என்பது நாட்டுக்கே தெரியும். எங்களிடமே வரி வசூலித்துவிட்டு எங்களுக்கே நிதி கொடுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? என ஸ்டாலின் வினவினார்.
மோடி என்றால் வளர்ச்சி என பாஜகவினர் கூறுகிறார்களே, அப்படி என்ன இந்தியாவை அவர் வளர்த்துவிட்டார்? என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதுதான் வளர்ச்சியா? என வினவிய அவர், இந்திக்கு பதிலாக இந்தியாவை வளர்க்கும் வழியை பாருங்கள் என்றும் சாடினார். மேலும், உயிரே போனாலும் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
லக்னோவில் கார் கண்ணாடி தானாக மூடியதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன் என்பவர் புதிய காரை வாங்கி குடும்பத்தை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, குழந்தை ஒன்று தலையை வெளியே நீட்டியிருக்க, டிரைவர் காரை ஆன் செய்துள்ளார். அப்போது, கண்ணாடி தானாக உயர்ந்ததால் குழந்தையின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக வருத்தப்படும் நிர்மலா சீதாராமன், மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாமே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா எனவும், குழந்தை திருமணம் முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வரை என அவரை போற்றுவதற்கான பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி மக்களுக்கு ஹோலியன்று இலவச கியாஸ் சிலிண்டர் அளிக்கப்படுமா? என பாஜகவுக்கு AAP மூத்தத் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில், ஹோலி, தீபாவளியன்று இலவச சிலிண்டர் அளிப்போம் என பாஜக வாக்குறுதி அளித்ததாகவும், அதுபோல வரும் ஹோலியன்று அளிக்கப்படுமா? இல்லை ரூ.2,500 போல இதுவும் ஜூம்லாதானா? என கேள்வி எழுப்பினார். இதற்கு விரைவில் சிலிண்டர் அளிப்பாேம் என பாஜக கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.