India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சிறு தவறு செய்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த டேனியல் (47) என்பவன், தனது 8 வயது வளர்ப்பு மகளான ஜெய்லினை, ‘ட்ராம்ப்போலைன்’ எனும் குதித்து விளையாடும் இடத்துக்கு அழைத்து சென்றிருக்கிறான். அங்கு 110 டிகிரி வெயிலில், ஜெய்லினை குதிக்க சொல்லி இருக்கிறான். தண்ணீர் கூட கொடுக்காமல் குதிக்கச் செய்ததால், ஜெய்லின் சுருண்டு விழுந்து இறந்திருக்கிறாள். இந்தக் கொடூரனுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
தனது ஐஸ்க்ரீமை சாப்பிட்ட தாய்க்கு எதிராக, 4 வயது சிறுவன் போலீசுக்கு போன் செய்த சுவாரஸ்ய சம்பவம் USAவில் நடந்துள்ளது. எனது மம்மி ரொம்ப மோசம், அவரை அரெஸ்ட் செய்ய வேண்டும் என அந்த சிறுவன் புகாரளித்துள்ளான். வீட்டிற்கு வந்து விசாரித்த போலீசார், உண்மை தெரிந்ததும், வேறு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து சிறுவனை சமாதானம் செய்துள்ளனர். மேலும், உதவிக்கு போலீஸை அழைக்க தெரிந்ததற்காக சிறுவனை பாராட்டினர்.
பிஹார் CM நிதிஷ்குமார் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருவதாக ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் நிலையானவராக இல்லை என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களை நிதிஷ், தேஜ கூட்டணி கட்சியினர் அவமதிப்பதாக கூறி, ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டில் அமையவிருக்கும் தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து EV கார்களை தயாரிக்க இருந்த திட்டத்தை ஜாக்குவார் லேண்ட் ரோவர் கைவிட்டுள்ளது. உள்ளூரில் EV பாகங்களுக்கான சரியான விலை, தரம் தொடர்பான கவலைகள் எழுந்ததால், இத்திட்டம் கடந்த 2 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், EVஐ விட Hybrid கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதும் இம்முடிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஜான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முக்யமந்திரி சமுஹிக் விவாக் யோஜனா திட்டத்தின்கீழ் மாநிலத்தில் திருமணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என கூறினார். படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்கப்படும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
➤மேஷம் – அச்சம் ➤ரிஷபம் – சுகம் ➤மிதுனம் – ஆக்கம் ➤கடகம் – சலனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤கன்னி – சிரமம் ➤துலாம் – ஊக்கம் ➤விருச்சிகம் – நலம் ➤தனுசு – லாபம் ➤மகரம் – இரக்கம் ➤கும்பம் – ஜெயம் ➤மீனம் – புகழ்.
கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அதை போட்டோஷூட் நடத்தி அவர்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். விதவிதமான போஸ்களில் பெற்றோர் ஆவதை அவர்கள் கொண்டாடியுள்ளனர். பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. கடந்த 2023 ஜனவரியில் இவர்களுக்கு திருமணம் ஆனது.
நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு, டைரக்ஷனில் கவனம் செலுத்த ரவி மோகன் முடிவு செய்துள்ளார். இதற்காக ஷூட்டிங் இடையே கிடைக்கும் நேரங்களில் திரைக்கதை எழுதி வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இக்கதையில் ஹீரோவாக யோகிபாபு நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே தொடங்க உள்ளது. தனது டைரக்ஷன் கனவை பல பேட்டிகளில் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீட், ஹைட்ரோகார்பன், டங்ஸ்டன் சுரங்கம், பிஎம் ஸ்ரீ என கொல்லைப்புறமாக துரோகம் செய்த DMKவிற்கு, ADMKவை பற்றி பேச அருகதை இல்லை என EPS சாடியுள்ளார். BJPயுடன் கூட்டணியில் இருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம் என TNஐ காத்திட்ட இயக்கம் ADMK எனவும், தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க CMக்கு திராணி இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.