India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக <<16237354>>அதிரடி மாற்றம்<<>> செய்யப்பட்டுள்ளது. மூத்த தலைவரான பொன்முடி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கட்சியில் மற்ற தலைவர்களுக்கான வார்னிங் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுவெளியில் கவனமாகப் பேசுங்கள் என CM அறிவுறுத்தியுள்ளார். இதனால், கட்சியில் மேலும், சிலர் மீது சாட்டை சுழற்றப்பட உள்ளதாம். உங்கள் கருத்து என்ன?
பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சர்ச்சை பேச்சுக்காக கட்சிப் பதவியை இழந்த பொன்முடி, தற்போது அமைச்சரவையில் இருந்தும் விலகியிருப்பது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அவர் பதவிகளை இழந்திருப்பது, விழுப்புரம் மாவட்ட திமுகவில் அவருடைய எதிர்த்தரப்பான செஞ்சி மஸ்தான், லட்சுமணன் கோஷ்டியினரின் கையை ஓங்கச் செய்துள்ளது. மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டதில் இருந்தே பொன்முடி அதிருப்தியில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
சம்மரில் வெப்பத்தை குறைக்கவும், ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை நோயாளிகள் கீழ்காணும் பானங்களை பருகலாம். மசாலா மோர் செரிமானத்தை ஊக்குவிக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பொட்டாசியம், எலக்ட்ரோலைட்களின் சிறந்த மூலமான தேங்காய் நீரை பருகலாம். நெல்லிக்காய் சாரில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் – புதினா டிடாக்ஸ் நீரையும் பருகலாம்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஃபார்ம் குறித்த கேள்விக்கு, இது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை என LSG கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சீசனில், நமக்கு சாதகமாக நடக்காதபோது, ஒரு வீரராக நம் மீது கேள்வி எழுவது உண்மைதான், ஆனால் அதை பற்றி மட்டும் தீவிரமாக யோசிக்க கூடாது எனவும், இது ஒரு டீம் விளையாட்டு என்பதால், தனி வீரர்களை மட்டுமே எப்போதும் நம்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை நவீனா போலே பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004-ம் ஆண்டில் நடந்த முதல் சந்திப்பிலேயே டிரெஸ்ஸை கழட்டிவிட்டு தன் முன் உட்கார சொன்னதாகவும், டிரெஸ் இல்லாமல் தனது உடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புவதாக சஜித் கூறியதாகவும் நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.
தனது சொந்த சிறுநீரை குடித்து முழங்கால் காயத்தில் இருந்து குணமானதாக பாலிவுட் நடிகர் பாரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். பட ஷூட்டிங்கின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த இயக்குநர் வீரு தேவ்கன் தன்னை சந்தித்து, தினமும் எழுந்ததும் சிறுநீரை குடிக்கச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 15 நாள்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, டாக்டரை பார்க்கச் சென்றபோது, அவரே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
J&K தீவிரவாத தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என காங். எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முன்னுதாரணம் காட்டி, அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பக்கா பாஜககாரர் போல அவர் பேசுவதாக காங். பதிலடி கொடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.