India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை அடுத்த 12 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை எனவும், மேலும் உயரும் என்றும் தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். <<17627852>>தங்கம் விலை<<>> நேற்று வரலாறு காணாத உச்சமாக 22 கேரட் 1 சவரன் ₹80,040-ஐ எட்டியது. ரிஸ்க் இல்லாத முதலீடு தங்கம் என்பதால், இதில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இனி தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டும் என்றும் கணித்துள்ளார்.
‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை வலுத்துவரும் நிலையில், 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் திமுக உள்ளதாம். இதனால் கடந்த முறையை விட இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, காங்., – 20, கம்யூ., கட்சிகள் – 8, IUML – 1 என கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம், கடந்த முறையை விட (6) இந்த முறை விசிகவுக்கு 8 சீட்டுகள் வழங்க திமுக தயாராகி வருகிறது.
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரச்சோதயா
பொருள்
வளைந்த யானைத் தும்பிக்கையைக் கொண்டவரே நான் பணிவுடன் உயர்ந்த புத்தியை நாடுகிறேன். என் வாழ்க்கையை ஞானத்தால் ஒளிரச் செய்ய மகிமை மிக்கவரை வணங்குகிறேன். எங்கும் நிறைந்த, ஒற்றைத் தந்தத்தையுடைய தெய்வீகப் பெருமானை நான் வணங்குகிறேன். SHARE IT.
இந்திய அணியில் விராட், ரோஹித் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான் என்று இங்கி., முன்னாள் வீரர் ரோலண்ட் புட்சர் கூறியுள்ளார். இவர்கள் இருவர் இல்லாதபோது, கில் தலைமையிலான இளம்படை இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்ததையும் அவர் பாராட்டினார். அதேநேரம், தற்போதைய இந்திய அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே என்றும் அவர் புகழாராம் சூட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
கடந்த சில நாள்களாக கூட்டணியில் (NDA) நடக்கும் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். TTV தினகரன் விலகல், செங்கோட்டையனின் பொறுப்பு பறிப்பால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் ஆகியவை NDA கூட்டணிக்கு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு கட்சியை அழைப்பதை விட, இருப்பதை வைத்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பதையே பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
BCCI வங்கிக் கணக்கில் ₹20,686 கோடி உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019-ல் ₹6,059 கோடியாக இருந்த பேங்க் பேலன்ஸ், கிட்டத்தட்ட ₹14,000 கோடி உயர்ந்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியினரின் பங்கு அளப்பரியது என்று கூறப்படுகிறது. சர்வதேச தொடர்களை விட IPL சீசன்களில் BCCI அதிக கல்லா கட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும் BCCI உள்ளது.
நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ‘Dosa king’ படத்தின் கதையை மோகன்லாலிடம் சொல்லியுள்ளாராம் டி.ஜே.ஞானவேல். இது மோகன்லாலுக்கும் பிடித்துபோக, படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை வழக்கில் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு கிடைத்த ஆயுள் தண்டனையை வைத்தே இப்படம் உருவாகவுள்ளது. இறுதியாக ஞானவேல் இயக்கிய ‘வேட்டையன்’ படம் தோல்வியையேச் சந்தித்தது.
கோயில் உபரி நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவற்றை கட்டக்கூடாது என மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைகளையும் ரத்து செய்த HC, இந்த நிதியை கோயில் மேம்பாடு, பக்தர்கள் நலன் ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் என்ன தவறு என்று SC கேள்வி எழுப்பியிருந்தது.
எப்போதெல்லாம் பாக்.,க்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைகிறோமோ, அப்போதெல்லாம் தன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று சேவாக் கூறியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தனது பொறுமையை இழந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இந்த டென்ஷனுக்கு காரணம், பாக்., உடனான கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த ஒரு Luck & Unlucky தான். ஏனென்றால், பாக்.,க்கு எதிராக சேவாக் விளையாடியபோது 17 வெற்றி, 21 தோல்விகளை இந்தியா சந்தித்துள்ளது.
கண்களாலேயே தனது உள்ளார்ந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவதில் கெட்டிக்காரர் தான் அபர்ணா தாஸ். ஸ்மைலிங்கான லுக், ஸ்டன்னிங் காஸ்ட்யூம் & லைட் மேக்கப் உடன் அவர் வெளியிட்ட போட்டோஸுக்கு ரசிகர்கள் ஹார்ட்ஸை (ஹார்ட்டின்கள்) கொடுத்து வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம், அவரை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம். அபர்ணாவிடம் உங்களுக்கு பிடித்தது எது?
Sorry, no posts matched your criteria.