News August 23, 2024
ரிஷப் பண்டை அதிகம் விரும்பும் ஆஸி. மக்கள்: ஹெய்டன்

ரிஷப் பண்டை ஆஸி. மக்கள் அதிகம் விரும்புவதாக முன்னாள் ஆஸி. வீரர் ஹெய்டன் தெரிவித்துள்ளார் பண்ட் போன்றவர்கள் வெற்றி தாகத்தை கொண்டிருப்பதாகவும், அவர் ஆஸி.,யில் விளையாடி போது ஒரு முக்கிய வீரராக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் விளையாடிய விதம் புதுமையாக இருந்ததாக புகழ்ந்துள்ளார். IND vs AUS இடையே வரும் நவம்பரில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஹெய்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
ரசிகர்களை நிச்சயம் பெருமைப் படுத்துவேன்: அஜித்

துபாய் ரேஸில் கார் விபத்தில் சிக்கியதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களிடம் நடிகர் அஜித் Sorry கேட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்களுக்கு, தான் ரேஸ் ஓட்டுவதையும், எங்களது அணி வெல்வதை பார்க்க முடியாததும் வருத்தம் அளிப்பதாக அஜித் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் ரசிகர்களை பெருமைப்படுத்தும் என அஜித் சத்தியம் செய்துள்ளார்.
News January 18, 2026
மகளிருக்கு ₹2,500.. புதுச்சேரி CM தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ₹1,000 உதவித்தொகையை சமீபத்தில் ₹2,500 ஆக உயர்த்தி அரசு அறிவித்தது. இந்நிலையில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தொகை விரிவாக்க திட்டத்தை CM ரங்கசாமி ஜன.22-ல் தொடங்கி வைக்கிறார். நேற்று, அனைத்து மகளிருக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
News January 18, 2026
கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: அன்புமணி

TN-ல் கஞ்சா சீரழிவை கட்டுப்படுத்த DMK அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி சாடியுள்ளார். X பதிவில் அவர், திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல்கள் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி, இதுபற்றி CM ஸ்டாலின் வாயைக் கூட திறக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி சமூகத்திற்கு எதிரானவர்களாக மாற்றிய ஒற்றை காரணமே, DMK-ஐ ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.


