News March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபியில் சாதனை படைத்த ஆஸி. அணி!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி பவர்-பிளேயில் (முதல் 10 ஓவர்களில்) 90 ரன்களை அடித்தது. இதுவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி பவர்-பிளேயில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 87 ரன்கள் அடித்திருந்தது. இச்சாதனையை ஆஸ்திரேலிய அணி, நேற்று முறியடித்துள்ளது. இந்த சாதனையை யார் முந்துவா?
Similar News
News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.
News March 1, 2025
கூலிக்கு பிறகு தெலுங்கு ஹீரோவை இயக்கும் லோகேஷ்

லியோ படத்திற்கு பிறகு, லோகேஷ் ரஜினியின் ‘கூலி’ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை முடித்து அவர், ‘கைதி 2’ தான் இயக்குவார் எனப்படுகிறது. ஆனால், இதனிடையே அவருக்கு பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பட வாய்ப்பை லோகேஷ் ஏற்பார் எனப்படுகிறது. இத்தகவல் வெளியாகவே ரசிகர்கள் மீண்டும் கைதி தள்ளிப்போகுமா என வருத்தத்தில் இருக்கிறார்கள்.
News March 1, 2025
இங்கிலாந்து அணி பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராஃபி ODI தொடரில் இன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கராச்சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ENG அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ENG அணி, தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ENG அணி ரசிகர்கள் உள்ளனர்.