News October 30, 2025
இந்தியாவுக்கு எதிராக AUS வீராங்கனை அதிரடி சதம்

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் 77 பந்துகளில் சதம் அடித்தார். இப்போட்டியில் லிட்ச்ஃபீல்ட் இதுவரை 18 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் இது அவருக்கு முதல் சதமாகும். அவருடைய விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே ரன் வேகத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும்.
Similar News
News October 30, 2025
USA தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு

ஈரான் சபாஹர் துறைமுகம் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியாவிற்கு 6 மாதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபாஹர் துறைமுகமானது இந்தியா – ரஷ்யா – ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும். இதில் இந்தியா பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது.
News October 30, 2025
யார் இந்த புதிய CJI சூரியகாந்த்?

53-வது CJI-ஆக நியமிக்கப்பட்டுள்ள <<18152053>>சூர்யகாந்த்<<>>, ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 1984-ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர். இமாச்சல் தலைமை நீதிபதியாகவும், ஹரியானா & பஞ்சாப் ஐகோர்டில் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர். வரும் நவ., 24 முதல் 2027 பிப்., 9-ம் தேதி வரை CJI-ஆக பணியாற்ற உள்ளார். அரசியல், தேர்தல் நடைமுறை சார்ந்த பல முக்கிய வழக்குகள் இவரது பணிக்காலத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
News October 30, 2025
‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.


