News August 4, 2024
ஆகஸ்ட் 4 வரலாற்றில் இன்று!

*1578–போர்த்துகீஸ் போரில் மொரோக்கோ படை வென்றது. *1783–பஞ்சத்தால் ஜப்பானில் 20,000 மக்கள் உயிரிழந்தனர். *1948–இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. *1965–குக் தீவுகள் சுயாட்சி அதிகாரம் பெற்றது. *1972–சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. *1987–விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை உரையை நிகழ்த்தினார் *2008–அறிஞர் அகத்தியலிங்கம் மறைந்த நாள்.
Similar News
News January 6, 2026
விஜய்யின் முடிவால் வருத்தம்: குஷ்பூ

சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்தது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ தனது கடைசி படம் என்று விஜய் கூறியது அதிர்ச்சி அளித்ததாகவும், வருத்தமாக உள்ளதாகவும் குஷ்பூ பேசியுள்ளார். தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை நான் எனக் குறிப்பிட்ட குஷ்பூ, அவர் தொடங்கியுள்ள புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.
News January 6, 2026
வங்கதேசத்தில் இந்து நபர் சுட்டுக் கொலை

வங்கதேசத்தில் இந்துக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நீடித்து வருகிறது. <<18771561>>இந்து பெண்<<>> பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது இன்று வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது ராணா பிரதாப் (45) என்பவர் பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சந்தையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இக்கொலையை செய்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.
News January 6, 2026
5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைகள் காலி!

தற்போது IT துறையில் வேலைவாய்ப்புகளை காலி செய்து வரும் AI, அடுத்ததாக வங்கி துறை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய வங்கிகளில் அடுத்த 5 ஆண்டிற்குள் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என சர்வதேச நிதி அமைப்பான Morgan Stanley எச்சரித்துள்ளது. மேலும், பல வங்கி கிளைகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளது. இது இந்தியா உள்பட உலகநாடுகளிலும் எதிரொலிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.


