News August 3, 2024

ஆகஸ்ட் 3: வரலாற்றில் இன்று!

image

*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

Similar News

News November 24, 2025

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

image

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ மொழி, கலாச்சாரத்தை தாண்டி பல மக்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் அடுத்த PAN இண்டியன் படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கலாச்சாரம் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோக, தற்போது பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமன் வேடத்தில் ரிஷப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 24, 2025

பொதுக்குழுவில் EPS-க்கு முழு அதிகாரம்

image

டிச.10-ல் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் EPS-க்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News November 24, 2025

கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

கனமழை எதிரொலியால் 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறை அளிக்காத மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிக்கு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் 18-வது மாவட்டமாக சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!