News August 3, 2024
ஆகஸ்ட் 3: வரலாற்றில் இன்று!

*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News December 16, 2025
திமுகவின் அடுத்த முகமா உதயநிதி?

வாரிசு அரசியல் என்ற விமர்சனம் திமுக மீது இன்றும் உள்ளது. இந்நிலையில், உதயநிதி முதலில் கட்சியில் இணைந்தபோது, சொந்த கட்சியினரே அதிப்ருதியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சமீபமாக உதயநிதியே திமுகவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார் என மூத்த தலைவர்களே கூறிவருகின்றனர். அதேநேரம், அவர் <<18564320>>திராவிட கொள்கைகளை<<>> முன்னெடுத்து செல்கிறார் என்றும் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News December 16, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 16, 2025
BREAKING: பள்ளியில் மாணவன் மரணம்.. தமிழகத்தில் துயரம்

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித், பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து தலைமீது விழுந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவனின் உயிர் பிரிந்தது. உறவினர்கள் மோகித்தின் உடலை கையில் ஏந்தி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.


