News August 19, 2024
ஆகஸ்ட் 19: வரலாற்றில் இன்று

▶உலக மனிதநேய நாள். ▶கிமு 295 – ரோமக் கடவுள் வீனசுக்கு முதலாவது ரோமக் கோவில் கட்டப்பட்டது. ▶1866 – இலங்கையில் முதல் தடவையாக தந்திச் செய்தி நியூயார்க்கில் இருந்து காலி நகரை வந்தடைந்தது. ▶1934 – ஜெர்மனியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹிட்லருக்கு ஆதரவாக 89.9% மக்கள் வாக்களித்தனர். ▶1960 – சோவியத்தின் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 விண்கலம் 2 நாய்கள், 40 சுண்டெலிகள், 2 எலிகளை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
Similar News
News November 23, 2025
10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.
News November 23, 2025
உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 23, 2025
வரலாற்றில் இன்று

*1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
*1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.
*1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
*2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.


