News January 14, 2025

‘சிறப்பு ரயில்’ சென்னை திரும்புவோர் கவனத்திற்கு..

image

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதேநாளில், மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில், நள்ளிரவு 12.45க்கு சென்னை வந்தடைய உள்ளது.

Similar News

News December 8, 2025

களத்திற்கு புறப்பட்ட விஜய்யின் பஸ் முதல் பாஸ் வரை (PHOTOS)

image

கரூர் சம்பவத்திற்கு பின் திறந்த வெளியில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு புதுவையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக உப்பளம் மைதானத்தில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5,000 பேருக்கு பாஸ் வழங்கும் பணிகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே 72 நாள்களுக்கு பிறகு விஜய்யின் பிரசார பஸ் பனையூரிலிருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. ஏற்பாடு குறித்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்க.

News December 8, 2025

டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

image

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.

News December 8, 2025

இரவிலும் உறங்காமல் உழைக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

image

எத்தனை எதிரிகள் வந்தாலும் TN-ஐ மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான் என ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மா.செ.க்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், இந்த ஆட்சியின் சிறப்பான பணிகளை பார்த்து நடுநிலை வாக்காளர்களும் ஆதரவாக நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் இரவிலும் உறங்காமல் உழைப்பதாகவும், அதேபோல அனைவரும் அப்படி உழைக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!