News April 16, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் VIP பிரேக் தரிசன டிக்கெட் (₹500 டிக்கெட்) வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் இன்று முதல் பாதியாக நிறுத்தி வைத்துள்ளது. VIP பிரேக் தரிசனத்திற்கான நேரம் குறைக்கப்பட்டு, அதில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
Similar News
News December 9, 2025
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்

இந்திய தேசிய மகளிர் ஆணையம், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் 31 நகரங்களில் (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) 12,770 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 9, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News December 9, 2025
இந்தியாவில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்

இந்தியா தனது லட்சியத்தை அடைவதற்கு மைக்ரோசாப்ட் துணை நிற்கும் என்று சத்யா நாதெல்லா உறுதியளித்துள்ளார். இதுபற்றி PM மோடியுடன் உரையாடியதாகவும், இந்தியாவின் AI வளர்ச்சிக்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தொகையானது, ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவின் AI எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு, திறனை உருவாக்கிட உதவும் எனவும் கூறியுள்ளார்.


