News October 30, 2025
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…

4,662 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்று, அதன் முடிவுகள் அக்.22-ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News October 30, 2025
சொந்த நாடு திரும்ப ஆசைப்படும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஷேக் ஹசீனா அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது பெரும் அநீதி என்ற அவர், தேர்தல் நியாமான முறையில் நடக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
News October 30, 2025
ரயில்வே வேலை வேணுமா? 5,810 Vacancies; முந்துங்க

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <


