News September 22, 2024
TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு.. புதிய மாற்றம்

TNPSC குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் முதல்நிலை (Prelims), முதன்மை (Mains) ஆகிய 2 நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில், முதன்மைத் தேர்வுகளின் விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை என புகார் எழுகிறது. இதனால், புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய TNPSC முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப்-2 தேர்வில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
EC நீதிமன்றம் அல்ல: ப.சிதம்பரம் காட்டம்

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 11, 2025
காசாவில் கொல்லப்பட்ட 5 பத்திரிகையாளர்கள்

காசாவின் அல்-ஷிஃபா ஹாஸ்பிடலுக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அல்ஜசிராவின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிஃப் தீவிரவாதி என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இறப்புக்கு முன்னர் ஷெரிஃப் எழுதிய உருக்கமான கடிதத்தை அவரது நண்பர் X தளத்தில் பகிர்ந்துள்ளார். 22 மாத போரில் இதுவரை 200 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
News August 11, 2025
யுத்த நாயகனின் ‘The Great Indian Escape’ பாத்துருக்கீங்களா?

மரணமடைந்த ‘<<17365976>>யுத்த நாயகன்<<>>’ டிகே பருல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘The Great Indian Escape’ (2019) என்ற படம் வெளிவந்தது. 1971 போரின் போது, பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இவர், சிறையில் இருந்து தப்பிக்கும் போது, தன்னுடன் சேர்த்து 2 இந்திய வீரர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார். விமானப்படை வீரரான டிகே பருல்கர் தனது வீரத்திற்காக வாயு சேனா மற்றும் விஷிஷ்ட் சேனா பதக்கங்களை பெற்றுள்ளார்.