News May 15, 2024
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <
Similar News
News December 12, 2025
மேகதாது அணை: குழுவை அமைத்தது கர்நாடகா

மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள 30 அதிகாரிகள் கொண்ட குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு SC அனுமதி அளித்தது. அத்துடன், தமிழக அரசின் கருத்தை கேட்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News December 12, 2025
NDA கூட்டணியில் இந்த கட்சிகள் சேரலாம்: அண்ணாமலை

NDA கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றி தேசிய பாஜக தலைமை, EPS, நயினார் ஆகியோர் இணைந்து முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். TTV, OPS உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்ற அவர், இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழக NDA தலைவர் EPS முடிவெடுப்பார் என்றார். மேலும், தங்கள் கூட்டணியில் தேமுதிக, பாமகவையும் இணைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
News December 12, 2025
TNPSC குரூப் 4 காலியிடங்கள் 4,400 ஆக அதிகரிப்பு

2026-ல் நடைபெறவுள்ள <<18460223>>TNPSC குரூப் 4<<>>-க்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்.6-ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து டிச.20-ல் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,000 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக 400 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,400 காலிப்பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் அடுத்த ஆண்டு நிரப்பப்படவுள்ளது.


