News May 15, 2024

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>https://www.dge.tn.gov.in/<<>> இந்த இணையதளத்தில் அறியலாம்.

Similar News

News December 21, 2025

புதுகை: மருத்துவர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

image

புதுகை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (பல் மருத்துவர்). இவரது மனைவி வெள்ளிக்கிழமை இரவு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் மருத்துவர் இருந்த நேரத்தில் மேல்தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் உள்ளே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுகை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

வேலூர்: கஞ்சா வழக்கில் கைதானவர் உயிரிழப்பு!

image

குடியாத்தம் தாலுகா போலீசார் கடந்த மாதம் 26-ந் தேதி கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (65) என்பவரை கஞ்சா செடி வளர்த்ததற்காக கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு கண்ணையனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின், சொந்த ஊரான கொட்டமிட்டா கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

News December 21, 2025

பொங்கல் பரிசு ₹5000.. வந்தாச்சு ஜாக்பாட் HAPPY NEWS

image

பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ₹3000 அல்லது ₹5000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பையும் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும். இதனால், புத்தாண்டு வாழ்த்தோடு CM ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!