News March 18, 2024
விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 2, 2026
ராஜபாளையம்: 2 பேர் திடீர் தற்கொலை

ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பைக் திருட்டில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை இவரது பாட்டி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் நேற்று தற்கொலை செய்துகொண்டார். ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பையா (44) என்பவர் தீவிர வயிறு வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று மன வேதனையில் கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News March 2, 2026
சிவகாசி: கருந்திரி தயாரித்த 7 பேர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை அருகே பனையடிப்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக தகர செட்டில் பட்டாசு கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள், 270 குரோஸ்களையும் பறிமுதல் செய்து கீழக்காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்துவை(32) கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.
News March 2, 2026
விருதுநகரில் +2 பொதுத்தேர்வு எழுதும் 22123 மாணவர்கள்

தமிழகம் முழுவதும் இன்று +2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 218 பள்ளிகளிலிருந்து 9855 மாணவர்கள், 11, 715 மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 553 பேர் என மொத்தம் 22123 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக 99 தேர்வு மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 99 தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


