News March 18, 2024

விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 14, 2026

விருதுநகர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1<>. இங்கு க்ளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 14, 2026

சாத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிருப்தி

image

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த ரூ.3000 ரொக்கம், சீனி, அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொங்கலுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊழியர்களிடம் கேட்ட போது சேலை, வேஷ்டி வந்தவுடன் கூறும் நிலையில் பொங்கலுக்கு வழங்காமால் தாமதமாக வழங்குவதால் கிராம மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

News January 14, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!