News March 18, 2024
விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 17, 2026
சிவகாசி: தீ விபத்தில் ஒருவர் பலி

திருத்தங்கல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் முருகன்(66). திருத்தங்கல் மண்டலத்தில் தினக்கூலி தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முருகன் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு எரித்துள்ளார். அப்போது எதிர்பாராமல் தீ முருகனின் உடையில் பற்றி உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 17, 2026
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

விருதுநகரில் 2026 – 2027ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் 29.02.2026 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
விருதுநகர்: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு கி<


