News March 18, 2024
விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 20, 2026
போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜன்(56). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காளிராஜனை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று போக்சோ நீதிமன்ற நீதிபதி காளிராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News February 19, 2026
விருதுநகர் : வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – Apply..!

விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <
News February 19, 2026
விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.


