News March 18, 2024
விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 21, 2026
விருதுநகர்: B.E போதும்- அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
விருதுநகர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 21, 2026
விருதுநகர்: புலிகள் நடமாட்டத்தால் வனத்துறை எச்சரிக்கை

ஸ்ரீவி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பாம்பு இறுக்கி ஒருவர் பலியானார். இதையடுத்து மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்ததால் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் தற்போது புலிகள் குட்டிகள் போட்டுள்ளதால் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


