News March 18, 2024

விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News February 23, 2026

விருதுநகர்: 50 நாட்களில் 10 கொலை சம்பவம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சிவகாசி உட்கோட்டத்தில் மட்டும் 6 கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் விருதுநகர், ஸ்ரீவி, சாத்தூர், ஆவியூர் ஆகிய பகுதிகளிலும் தலா 1 கொலைகள் என கடந்த 50 நாட்களில் 10 கொலை சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 23, 2026

சிவகாசியில் கட்டையால் தாக்கி ஒருவர் கொலை

image

சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (35). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராமரை அவரது மனைவியுடன் சேர்ந்து வாழும் படி அவரது தம்பி சபரிராஜன் தகராறு செய்துள்ளார். அபோது ஆத்திரமடைந்த ராமர் கட்டையால் சபரி ராஜனை தாக்கியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 23, 2026

விருதுநகர் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு..!

image

விருதுநகர் மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

error: Content is protected !!