News April 25, 2024
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News November 13, 2025
₹20,000 வழங்குகிறது தமிழக அரசு

இ-ஸ்கூட்டர் வாங்க ₹20,000 வரை மானியம் வழங்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. உணவு டெலிவரி ஊழியர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் இந்த மானியம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நாடி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
News November 13, 2025
ஒரே நேரத்தில் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த சதி

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 8 பேர், தலா 2 பேர் கொண்ட 4 குழுக்களாக பிரிந்து சென்று, மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வரும் PM

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 19-ம் தேதி PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


