News April 25, 2024
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News September 23, 2025
அக். 14-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

அக்.14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல்நாளில், மறைந்த முன்னாள் MLA-க்கள் 8 பேர் & வால்பாறை MLA-வுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், 2025-26 கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எத்தனை நாள்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.