News March 5, 2025

பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள், பெற்றோர் தங்கள் புகார்கள், சந்தேகங்களை அறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383075, 9498383075 ஆகிய எண்களில் அழைக்கலாம். ALL THE BEST.

Similar News

News March 5, 2025

BREAKING: நியூசி., அபார வெற்றி

image

ICC Champions Trophy தொடரின் 2nd Semi-Finalலில் தெ.ஆப்., அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நியூசி., அணி முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த NZ 362 ரன்கள் எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய SA 50 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசி., அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது யார்?

News March 5, 2025

உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

image

திருச்சியை சேர்ந்த பிரபல கவிஞர் நந்தலாலா (70) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கவிஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சிறந்த பேச்சாளரான நந்தலாலா, தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றப் பொதுக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து இருந்தார்.

News March 5, 2025

தாய்க்கு செய்த சத்தியத்தை காக்கும் மக்கள் மருத்துவர்❤️

image

ராஜஸ்தானை சேர்ந்த டாக்டர் நாகேந்திர சர்மா, கடந்த 26 ஆண்டுகளாக வலிப்பு நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட வலிப்பு நோயாளிகளை குணப்படுத்தியுள்ள நாகேந்திர சர்மா, தனது இந்த சேவைக்கு தன் தாயாரே காரணம் என்கிறார். வலிப்பு நோயால் மரணப்படுக்கையில் இருந்த தனது தாயாரிடம், இனி இந்த நோயால் யாரையும் இறக்க விட மாட்டேன் என செய்து கொடுத்த சத்தியமே இதற்கு காரணமாம்.

error: Content is protected !!