News June 25, 2024
காபி குடிக்காதவர்கள் கவனத்திற்கு…

காபி குடிப்பவர்களை விட, குடிக்காதவர்கள் இறப்பதற்கு 1.6 மடங்கு அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிஎம்சி பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் காபி குடிக்காமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் இறப்பதற்கு 60% வாய்ப்புள்ளதாகவும், நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் இருந்து காபி பாதுகாப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 27, 2025
சட்டையில் ஜெ., படம்: தோளில் TVK துண்டு

செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த போது, விஜய் அவருக்கு TVK துண்டு போட்டார். அப்போது, அவரது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது ஆச்சர்யத்துடன், கேள்வியையும் எழுப்பியது. இதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், ‘இது ஜனநாயக நாடு; யாரோட புகைப்படத்தை வேண்டுமானாலும் வச்சுக்கலாம்’ என்று தெரிவித்தார். கட்சி மாறினாலும், பாசம் இன்னும் போகவில்லை போல என பலர் இதுபற்றி கருத்து கூறி வருகின்றனர்.
News November 27, 2025
BREAKING: புயல் உருவானது.. பேய் மழை வெளுக்கும்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக IMD அறிவித்துள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே திசையில் சுமார் 700 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்வா புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு 2 நாள்கள் <<18402600>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
பொங்கல் பரிசாக ₹5,000?… ரேஷன் கார்டுக்கு வழங்க திட்டம்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பரிசுத் தொகை இல்லாமல், பொங்கல் பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


