News August 11, 2024
18 வயது முடிந்தவர்கள் கவனத்திற்கு..

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆக.20 முதல் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2025 ஜன.1க்குள் 18 வயது நிறைவடைவோரும் இப்போது வாக்காளர்களாக பதிவு செய்யலாம். அக்.29க்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவ.28 வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.6ல் வெளியிடப்படும்.
Similar News
News January 7, 2026
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது<
News January 7, 2026
NDA-வின் எதிர்காலத்தை கணித்த காங்., MP

NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை விட பூஜ்ஜியம் என சொல்லலாம் என MP சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியல் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் பாஜக என்ன சதி வேலை செய்ய நினைக்கிறது என மக்களுக்கு தெரியும் எனவும் பேசியுள்ளார். மேலும், பாஜக உடன் கூட்டணி வைக்கும் கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை என்ற அவர் இக்கூட்டணி வரலாறு காணாத தோல்வியை தழுவும் என்றார்.
News January 7, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில CM ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1,000 உரிமைத்தொகையானது, வரும் 12-ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ₹2,500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.


