News May 7, 2024
அந்நிய சக்திகளின் முயற்சி தோல்வியடையும்

தேர்தல் முடிவுக்குப் பின் உலக நாடுகள் இந்திய ஜனநாயகத்தை புதிய கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து வெளிநாடுகள் கூறும் கருத்துக்களுக்கு பதிலளித்த அவர், அந்நிய சக்திகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து மக்களவைத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர் என விமர்சித்தார். மேலும், அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடியும் எனக் கூறினார்.
Similar News
News August 23, 2025
Missed Call மூலம் PF பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி?

UAN எண் கைவசம் இல்லையா? பிரச்னையே இல்லை, மிஸ்டு கால் மூலமும் பிஎஃப் பேலன்ஸை நீங்கள் அறியலாம். இதற்கு, உங்கள் பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ஒரே ரிங்கில் கால் கட் ஆகிவிடும். இதனை அடுத்து உங்களுக்கு ஒரு SMS வரும் அதில் உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். SHARE IT.
News August 23, 2025
BREAKING: மூத்த தலைவர் அப்போலோவில் அனுமதி

பாமக கௌரவ தலைவரும், MLAவுமான ஜி.கே.மணி உடல்நலக்குறைவால் சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்த மெடிக்கல் ரிப்போர்ட், இன்று மதியத்திற்கு மேல் அப்போலோ தரப்பில் வெளியிடப்படும் என தெரிகிறது.
News August 23, 2025
செப்.1-ல் முடிவு.. RB உதயகுமார் அறிவிப்பு

யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் பலகட்ட ஆலோசனைகள் இருக்கும். ஆனால், கூட்டணி அமைத்தபிறகு பல குழப்பங்களுக்குள் சிக்கியுள்ளது அதிமுக. காரணம், நேற்று வரை EPS பெயரைக் குறிப்பிடாமல் ‘கூட்டணி ஆட்சி’ தான் என்கிறார் அமித்ஷா. மறுபக்கம் CM நாற்காலியில் EPS-ஐ அமரவைக்க வேண்டும் என சொல்கிறார் அண்ணாமலை. இந்நிலையில், இதுகுறித்து கேட்டதற்கு, ‘செப்.1-ல் EPS பதிலளிப்பார்’ என முடித்துவிட்டார் RB உதயகுமார்.