News May 7, 2024
அந்நிய சக்திகளின் முயற்சி தோல்வியடையும்

தேர்தல் முடிவுக்குப் பின் உலக நாடுகள் இந்திய ஜனநாயகத்தை புதிய கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து வெளிநாடுகள் கூறும் கருத்துக்களுக்கு பதிலளித்த அவர், அந்நிய சக்திகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து மக்களவைத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர் என விமர்சித்தார். மேலும், அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடியும் எனக் கூறினார்.
Similar News
News April 2, 2026
BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹2,400 குறைந்தது

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,600 சரிந்து நடுத்தர மக்கள் மற்றும் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,750-க்கும், 1 சவரன் ₹1.10 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி கிலோ ₹2.55 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. SHARE IT
News April 2, 2026
BREAKING: குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து, அரசுக்கு ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது 14 ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது.
News April 2, 2026
₹1,000 கோடி ஊழல்.. நேருவை விமர்சித்த விஜய்

திருச்சி பிரசாரத்தில், அமைச்சர் KN நேருவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார். இங்கு (திருச்சி) ஒரு அமைச்சர் உள்ளார். நகராட்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் என விமர்சித்தார். கல்லூரி உதவி பேராசிரியர் பணி 2,000 பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.


